புதன், 9 ஜனவரி, 2019

மோக உவமை! - 18




    பாடலில் ஒரு பொருளின் மேலுள்ள ஆசையால் (வேட்கையால்…) அப்பொருளையும் உவமையையும் மாற்றி மாற்றி மயக்கம் தோன்ற உவமிப்பதுமோக உவமைஆகும். (மோகம்மயக்கம்)

உ. ம்
நடன மயிலல்ல நங்கைதான்! தோகை
உடையமயில் தான்!நங்கை உண்டோ! – தடங்கண்டே
ஆடிடும் தாரகையே ஆசைமன மோகத்தால்
தேடினேன் கண்கள் திறந்து!

பொருள்நடனமாடிக் கொண்டிருப்பது மயில் கிடையாது. அது மங்கை தான். தோகை உடைய மயில்தான். மங்கை அல்ல. அழகிய நடனத்தைச் சரியாக ஆடுகின்ற நட்சத்திரம் போன்று மின்னும் பெண்ணே. என்மனம் கொண்ட ஆசை மயக்கத்தால் என் கண்களைத் திறந்து மயிலோ மாதோ என்று தேடுகின்றேன்.
   பாடலில் பொருள் நங்கை. உவமை மயில். நடனமாடுவது நங்கையா மயிலா என்று அறிய முடியாமல் மோகமுடன் சொல்வதால் இது மோக உவமைஆகியது. மங்கைக்கு மயிலை உவமையாக கூறியதால் உவமையுமாகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக