முன்ன விலக்கணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்ன விலக்கணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஜூன், 2019

வன்சொல் விலக்கணி!



முன்ன விலக்கணி!

பாடலில் வன்சொல் சொல்லி ஒரு செயலை விலக்குவது வன்சொல் விலக்குஎனப்படும். பொதுவாக இதிலிருந்து தொடரும் எட்டு விலக்கும் தோழி கூற்றாகவே உதாரணப் பாடலைக் கொடுத்துள்ளார்கள்.

. ம்
கருவேல முட்களெல்லாம் கால்களில் குத்தும்
திருமேனி நோயால் துவளும்! – அருவுயிர்ப்
போகும்! புதுவிடம் போகா(து) இருதோழி!
போகுமுயிர் நிற்கும் பொலிந்து!

பொருள் புது இடத்திற்கு போனால் கருவேலம் முள் கால்களில் குத்தும். அதனால் நோய் உண்டாகும். அழகிய மேனி துவண்டு கடைசியில் அரிய உயிரும் போய்விடும். அவ்விடம் போகாது இருந்துவிட்டால் உயிரானது நின்று வாழும்.
   ஓர் இடத்திற்கு செல்லும் தன் தோழியை, அங்கே போனால் முட்கள் குத்தும். நோய் வந்து சேரும். உயிர் போகும் என்ற வன்சொற்களைச் சொல்லி அந்த செயலை விலக்குவதால் இது வன்சொல் விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2019

திங்கள், 27 மே, 2019

நிகழ்வினை விலக்கு!



முன்ன விலக்கணி!

பாடலில் நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வினை விலக்கிப் பாடுவது நிகழ்வினை விலக்குஎனப்படும். (இது இருக்க அது ஏன்)

. ம்
திருமுகத்தில் தொங்கி தெளிவின்றி ஆடும்
சுருள்கொண்ட கார்குழலும் சொல்லும் அரும்பே
அழகென்று சூட்டினாய்! அஃதிலும் மேலாம்
விழல்போன்ற கூந்தலன்றோ! வீண்!

பொருள் அழகு பொருந்திய முகத்தில் தொங்கி அங்கும் இங்கும் காற்றில் அசைந்து ஆடும் சுருண்ட கூந்தலும் சொல்லும். மலராத அரும்பை அழகென்று சூட்டினாய். ஆனால் அதைவிட அழகானது விழல் போன்ற கூந்தல் தான். அதனால் அந்த அரும்பு வீண்.

பாடலில் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் மலரைவிட அந்தக் கூந்தல் மிக அழகாக இருக்கிறது. அதனால் மலர் வேண்டாம் என்று நிகழ்காலத்தில் நடப்பதை விலக்குவதால் இது நிகழ்வினை விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
27.05.2019