விரூபக உருவகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விரூபக உருவகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜனவரி, 2019

விரூபக உருவகம் – 8




    பாடலில் ஒரு பொருளுக்கு அதற்கு பொருந்தாத தன்மைகள் உள்ளவைகளைக் கூட்டி உருவகஞ்செய்வது “விரூபக உருவகம்“ எனப்படும்.

உ. ம்
தேயா நிலவழகு, தென்றல் கொடுந்தன்மை,
பாயா ஒளிவெள்ளம் பாவைமுகம்! – ஓயா(து)
உறங்கும் அலைகடலை ஒற்றொளிரும் வெண்மை
நிறமதிதான் என்பேன் நிறைந்து!

பொருள் – தேயாத நிலவின் அழகும், தென்றல் தரும் கொடுமையான தன்மையும், பாய்ச்சாத ஒளிவெள்ளமும், ஓயாமல் உறங்கும் அலைகடலின் மேல் தோன்றி ஒளிரும் வெண்மையான நிறமுடைய மதிதான் என்பேன் அவளின் முகம்.
    பாடலில் நிலவானது தேயும் தன்மையுள்ளது. தென்றல் இன்பம் தருவது. ஒளி என்பது எங்கும் பாய்ந்து வெளிச்சத்தைத் தருவது. கடல் ஓயாதது. இப்படிப் பொருந்தாத தன்மைகளை உருவகமாகக் கூட்டி அப்பெண்ணின் முகத்துக்கு உருவகஞ்செய்ததால் இது “விரூபக உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.01.2019