வியாழன், 30 ஏப்ரல், 2020

கஞ்சிக் காகச் சாகுதே!




(வண்ணம் – 11)
.

தந்தத் தானத் தானனா
   தந்தத் தானத் தானனா!
.
பண்பைக் கூறிப் பாரிலே
   பண்ணைப் பாடிப் போகுதே!
தொண்டைக் காயக் கூவியே
   தொந்திக் காகத் தேடுதே!
பண்டைக் காலச் சாபமோ
   பஞ்சப் பூதத் தீமையோ?
கண்ணுக் கேவிக் கூசவே
   கஞ்சிக் காகச் சாகுதே!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2020

கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு!



(இசைப்பாடல்)
.
(எடுப்பு)
கண்ணாலே வலைவீசி பேசிடும் சிட்டு - எனைக்
கண்டதும் முகமூடிப் போவதேன் விட்டு!
.
(தொடுப்பு)
பொன்னான பொழுதினில் தொடர்ந்திட்டப்
பொலிவான காலங்கள் நினைவில்லையோ!
அன்றாடிய இனிமையை எடுத்தோத
அழகான தமிழிலே சொல்லில்லையோ!
.
எண்ணத்தில் உருவான இனிமையை
எழுதிய அடியெல்லாம் கவியில்லையோ!
அன்பாக அதைக்கூட்டிப் பாடிட
அருளான நெஞ்சிலே இடமில்லையோ!
.
துள்ளாமல் வளர்ந்திட்ட காதலால்
துணிவாகக் கரம்பிடித்த உறவில்லையோ!
தள்ளாத வயதாகி விட்டதனால்
தளர்வாயில் சொல்லுரைக்கப் பல்லில்லையோ!
.
என்னென்றும் ஏதென்றும் அறியாமல்
இளமையினைப் பேசுதல் சரியில்லையோ!
உன்னுயிர் இங்கிருப்பதை உள்ளாடும்
உணர்வெலாம் உன்மனதைக் கொல்லலையோ!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2020

புதன், 29 ஏப்ரல், 2020

மனமிகும் ஈருடல் அருந்தேனோ!



(வண்ணம் – 10)
.
தனந்த தானந் தனதன தானன தனதானா
   தனந்த தானந் தனதன தானன தனதானா!
.
குறைந்த காதல் தனிமையி லேயழ விணைந்தோனே
   குளிர்ந்து நாடும் வழியொடு கூடிட விருந்தானே!
மறைந்து பாடுங் குரலினி லாசையி னழகோசை
   மலர்ந்த மாதின் செவிதனி லேவிழ விழைந்தானே!
நிறைந்த பூவும் நிறமிகு சேலையொ டிருந்தாளோ
   நெகிழ்ந்த காலும் வளையிடு கையொடு விரைந்தாளே!
சிறந்த லூடல் விழியொடு மோதிட மறையாதோ
   செறிந்து வாழும் மனமிகு மீருட லருந்தேனோ!
.
பாவலர் அருணா செல்வம்
29.04.2020

விழைதல்உள்ளோசை, ஆசைப்படுதல், விரும்புதல்
செறிதல்கலத்தல், இணைதல்,

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

வித்தைப் பாடிப் பணிவோமே!



(வண்ணம் – 9)
.
தத்தத் தானத் தனதானா
தத்தத் தானத் தனதானா!
.
ஒற்றுக் கேயொற் றெனநோயா
   யுற்றக் கோரக் கொரொனாவே!
சுற்றித் தேடித் துணிந்தோமே
   சொக்கிப் போயிப் பதுங்காதே!
தொற்றுக் கேதொற் றெனவேலால்
   கொற்றத் தைவிட் டழிவாயே!
வெற்றிக் கேபட் டொளிர்வானை
   வித்தைப் பாடிப் பணிவோமே!
.
பாவலர் அருணா செல்வம்
28.04.2020

வென்று மின்ன நீயெழு!



(வண்ணம் – 8)
.
தன்ன தன்ன தானன
தன்ன தன்ன தானன!
.
அன்று கந்த னேயென
   அன்பு கொண்டு பாடிட,
இன்று நொந்த நோயென
   இன்ன லொன்றி வாடிட,
ஒன்றி வந்த தேபிணி
   யுன்ன ருள்ள மோதிட,
வென்ற ழிந்து நீங்கிட
   வென்று மின்ன நீயெழு!
.
பாவலர் அருணா செல்வம்
28.04.2020

திங்கள், 27 ஏப்ரல், 2020

செல்ல காதல் ஊறுமே!



(வண்ணம் – 7)
.
தய்ய தான தய்ய தான
தய்ய தான தான்னா !
.
பொய்யி லூட லுள்ள மாது
   புல்லு மோக மூறவே,
வெய்ய னேற வல்ல சூடு
   வெள்ள மாகி யேறவே,
மெய்யி னோடு துவ்வ லேற
   மெல்ல மாக வேசவே,
செய்யு ளோது மில்ல னோடு
   செல்ல கால லூறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
27.04.2020

பொல்லம்இணைதல்
துவ்வல்அனுபவித்தல்

இசையூட்டி யென்றும் பணிவேனே!



(வண்ணம்)
.
தனதாத்த தன்ன தனதாத்த தன்ன
   தனதாத்த தன்ன தனதானா (அரையடிக்கு)
.
மயலேற்கும் வண்ண உயிரோட்ட மின்ன
   மனமேற்க விஞ்சும் தமிழ்போலே!
   மறையூட்டி நல்ல வழிகாட்டி வல்ல
   மதியூட்டும் கந்த பெருமானே!
.
அயல்நாட்டில் வந்து தமதாக்க வெண்ணி
   அனலூட்ட நின்ற கொரொனாவோ!
   அடைகாத்து நெஞ்சுள் சளியேத்தி மிஞ்சி
   அழிவூட்டும் நுண்கி ருமிதானே!
.
கயலூட்டும் கண்கள் பயமூட்டும் வண்ணம்
   கனலூட்டி யுண்ணும் பிணியாலே!
   கடைநீக்கங் கொண்டு பணவீக்கங் கண்டு
   கழிவேற்ற மின்றி யழிந்தோமே!
.
இயைபாக்கி யெங்க ளுயிர்காத்து மந்த
   இடரோட்டி யின்ப மருள்வாயே!
   இதையேற்று மின்னல் கவிதீட்டி வண்ண
   விசையூட்டி யென்றும் பணிவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
27.04.2020

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

வேலோடு விரைவாயே!



(வண்ணம் – 5)
.
தன்னனன தானான தனதான
    தன்னனன தானான தனதான!
.
விந்தையொடு சீனாவி லுருவாகி,
   விஞ்சுகிற நோயாகி இடமோடி,
வந்தவழி நாடோடு நமதாக,
   வன்பிணியி லேயூறி இனஞ்சாக,
நிந்தைவிழி நீரோடி மனங்காய,
   நெஞ்சுருகி யேயோடி யுனைநாட,
இந்தவிட நோயோட முருகாவுன்
   அந்தம்பெரு வேலோடு விரைவாயே!
.
பாவலர் அருணா செல்வம்
26.04.2020