17 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
17 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 பிப்ரவரி, 2022

குறிஞ்சிப்பூ! (நீலக்குறிஞ்சி)

 


உயர்ந்த மலைதனில் உன்னதமாய்ப் பூக்கும்!
நயந்தருந் தேனினை நல்கும்! - வியப்பாகப்
பன்னிரெண்டு ஆண்டுகள் பார்க்க முடியாது!
சின்னக் குறிஞ்சி சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2022

திங்கள், 10 ஜனவரி, 2022

உற்றறிந்து கொள் !

 


மார்கழியில் ஆண்டாள் வரைந்த திருப்பாவை
ஊர்போற்ற பாடுகின்றார் உன்னதமாய்! - வீர்கொண்டு
நற்றமிழில் பாடிடுவேன் நற்கவிகள்! என்னவனே!
உற்றறிந்து கொண்டால் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

புதன், 9 ஜனவரி, 2019

விகார உவமை! - 17




    
   பாடலில் ஒரு பொருளின் உவமையை விகாரப்படுத்தி உவமிப்பதுவிகார உவமைஆகும். விகாரம் என்பது ஓர் உவமையை நேரிடையாகக் கூறாமல் அதில் மறைந்துள்ள ஒன்றை மட்டும் எடுத்துக் கூறுவது ஆகும்.

உ. ம்
கயலின் வடிவெடுத்துக் கண்கள் வரைந்தும்!
வயலின் வளமுடல் வார்த்தும்! – அயனவன்
பொன்னில் நிறமெடுத்துப் பூசி மகிழ்ந்தானோ
என்சொல்வேன் உன்னழகை இன்று!

பொருள்நான்முகன், மீனின் வடிவத்தை எடுத்து உன்றன் கண்களை வரைந்து, வயலில் உள்ள செழுமையான வளத்தை எடுத்து உன் உடலை வார்த்து, பொன்னில் உள்ள நிறத்தை எடுத்து உன் மேனியில் பூசி நிறங்கொடுத்து அதைக்கண்டு அவனே மகிழ்ந்தானோ. இன்று உன் அழகை என்னவென்று சொல்வேன்.
    மீனின் மேலுள்ள வடிவத்தையும், வயலில் உள்ள செழுமையையும், பொன்னில் உள்ள நிறத்தையும் மட்டுமே எடுத்து உவமித்து இருப்பதால் இது விகார உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019