விபாவனை அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபாவனை அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜூன், 2019

விபாவனை அணி!



வினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்!

இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வின் உலகறிந்த பொருளைக் கூறாமல் அவ்வினை அந்தப் பொருளுக்கானது அல்ல என்று இவ்வினையை மறுத்து அதற்கு எதிரான வேறு ஒரு நிகழ்வைக் கூறுவதுவினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்எனப்படும்.

. ம்
தேயாத வெண்ணிலவில் தேர்ந்த இருளான
வேயாத கூறை விரிந்திடப்பாயாத
கூர்வேலால் தாக்கக் கொடியில்லாப் பூவிதழாள்
சேர்க்காமல் சென்றதேன் செப்பு!

பொருள்தேயாத வெண்ணிலவில் (பெண்ணின் முகம்) மிகவும் அடர்ந்த இருளான வேயாத கூறை விரிந்திட (தலையில் உள்ள கற்றைக் குழல் விரிந்திட), பாயாத கூர்வேல் தாக்க (கண்கள் தாக்க) கொடியில்லா பூவிதழாள் (செவ்விதழ்வாய்) தன்னைச் சேர்த்து அணைக்காமல் சென்றது ஏன் ? இது தலைவனின் கூற்று இயல்பாக வந்துள்ளது.
    தேய்ந்து வளரும் தன்மையுள்ளது வெண்ணிலவு. இங்கே தேயாத நிலவு என்றதால் இது அந்த மங்கையின் முகத்தைக் குறிக்கிறது. குடிசைகளில் கீற்றோலையால் அடுக்கப்படுவது. இங்கே வேயாத கூறை என்றதால் இது அவளின் தலை முடியைக் குறிக்கிறது. வேல் பாய்ந்து தாக்கும். இங்கே பாயாத கூர் வேல் என்றதால் இது அவளின் கண்களைக் குறிக்கிறது. பூக்கள் கொடியில் பூக்கும். இங்கே கொடியில்லாப் பூ இதழ் என்பதால் இது அவளின் வாயைக் குறிக்கிறது.
   தேய்ந்து வளருதற்கு வெண்ணிலவும், குடிசைக்குக் கீற்று வெய்யப்படுவதும், வேல் பாய்வதும், பூக்கள் கொடியில் இருப்பதும் அதன் அதன் வினைகள். இவ்வினைகளை மறுத்து, முகம், தலைமுடி, கண்கள், வாய் என்று பி பொருட்கள் புலப்படுத்துவதாக வந்துள்ளதால் இதுவினையெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
10.06.2019

வியாழன், 9 மே, 2019

அயற்காரண விபாவனை ! (இயல்பு)



விபாவனை அணி! 
    பாடலில் எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பொருத்தமான, ஏற்புடைய காரணத்தைச் சொல்லாமல், அதற்கு நிகரான வேறு ஒரு காரணத்தால் சிறப்பித்துப் பாடுவதுஅயற்காரண விபாவனைஆகும். இதனை இயல்பு காரண விபாவனைஎன்றும் கூறுவர்.

. ம்
கண்மூடிக் காட்சிகளைக் காணும்! பெரும்பசிக்கு
உண்ணாமல் மேனி ஒளிர்ந்திடும்! – பண்இன்றி
நெஞ்சம் மகிழ்ந்தாடும்! நேரம் உருளாது
வஞ்சியின் நேசன் வரவு!
.
பொருள்கண்களை மூடிக்கொண்டு காட்சிகளைக் கண்டு மகிழும். நிறைந்த பசிஎடுத்தும் உணவு உண்ணாமலேயே அவளின் மேனி அழகுடன் மிளிரும். இசை இல்லாமலேயே நெஞ்சமானது நடனமாடும். நேரம் போகாமல் இருக்கும் அந்தப் பெண்ணின் மனத்தில் வாழ்பவர் வரும் நேரத்தில்.

    காட்சிகளைக் காண்பதற்கு கண்கள் திறந்தும், உடல் ஒளியுடன் மின்ன உணவும், நடனமாட இசையும், நேரம் ஓடிக்கொண்டே இருப்பதும் தான் உலகின் இயல்பு. இது உலகம் அறிந்த காரணமாகும். ஆனால் பாடலில் இவ்வாறு இல்லாமலேயே அந்த அந்தச் செயல்கள் நடந்தன என்பதால் இதுவிபாவனைஆகியது. இங்ஙனம் நடப்பதற் கெல்லாம் காரணம் அந்தப் பெண்ணின் தலைவன் வரும் நேரம் என்பது உணரப்படுவதால் இதுஅயற்காரணம்ஆயிற்று.
.
பாவலர் அருணா செல்வம்
09.05.2019