ஊருயர் நிலைத்துக் காக்க விரைவாயே!
.
தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த தனதானா ! (அரையடிக்கு)
.
நாடிய கருத்தைக் காக்க
மாமலை யிடத்தைக் காட்டி
நாரத பழத்தைக் கேட்ட பெருமானே!
நாடகம் முடித்துச் சீற்ற
மாறிய இறுக்கைப் போக்க
நாடக விளக்கைச் சேர்த்த பழம்நீயே!
கூடிய சினத்தைப் போக்கி
ஆதவ முகத்தைக் கூட்ட
கோவண உடுப்பைத் தீட்டி யணிந்தோனே !
கூடிய கரத்தைச் சேர்க்க
ஆயுளை எடுத்துச் சாய்த்த
கூடிய விதத்தொற் றோட்ட வருவாயே !
ஓடிய கனத்தைப் போக்கி
வேலினை எடுத்துத் தாக்கி
ஊறினை யொழித்துக் காக்குஞ் செயலோனே!
ஊடிய நெருப்பைத் தீய்த்து
வாடிய மனத்தைத் தேற்றி
ஊருயர் நிலைத்துக் காக்க விரைவாயே!
பாடிய கருத்தைக் கேட்ட
நோயிடர் மனத்தைக் காத்த
பாலனை உயர்த்துப் போற்றி மகிழ்ந்தாடும்!
பாளிதங் குழைத்துத் சேர்த்து
நீரினை நிறைத்திட் டேற்ற
பாரகம்
நினைத்துப் போற்றி மகிழ்ந்தாடும்!
.
பாவலர் அருணா செல்வம்
30.05.2020
பாளிதம் - சந்தனம்
பாரகம் – உலகம்