முக்கனியில் ஒன்றாகி முந்திவரும் மாங்கனி!
எக்கனிக்கு ஈடாம் இதன்சுவை? - பக்குவமாய்
மாம்பருப்பை உண்ண வயிற்றோட்டம் சீராகும்!
மாம்பூ கொழுந்தும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
18.05.2022
முக்கனியில் ஒன்றாகி முந்திவரும் மாங்கனி!
எக்கனிக்கு ஈடாம் இதன்சுவை? - பக்குவமாய்
மாம்பருப்பை உண்ண வயிற்றோட்டம் சீராகும்!
மாம்பூ கொழுந்தும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
18.05.2022
குருந்தம்வேர் வீட்டின் குறைகளைப் போக்கும்!
குருகுலக் கல்விக் குதவும்! - மருந்தாக
வாசமலர் நீரருந்த வாயுநீங்கும்! வேரினால்
தோசம் விலகுமாம் தோய்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.05.2022
எருவைப்புல் ஆற்றோரம் எங்கும் வளரும்
பெருநாணல் ஆகும் ! பெரிதும் - எருமை
விரும்பியுண்ணும்! மூத்தோர் விரைந்து நடக்கத்
தரும்ஊன்று கோலாகும் தண்டு!
.
பாவலர் அருணா செல்வம்
16.05.2022
குறுநறுங் கண்ணியெனும் குன்றிமணி அன்று
சிறுபொன் எடைபார்க்க செய்வர்! - உறும்விசம்
கொண்ட விதைஉயிரைக் கொல்லும்! குன்றிமணி
கண்கொண்ட பிள்ளையார் காண்!
.
பாவலர் அருணா செல்வம்
11.05.2022
நீண்டதாய்க் காம்பிருக்கும் நெய்தல் மலர்களைக்
வேண்டும் கடவுளுக்கு வைத்திடுவார்! - காண்பதற்கு
பெண்விழி யொக்கும்! பெருமளவு தூய்மையுள்ள
தண்ணீரில் பூக்கும் தழைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
10.05.2022
வழைமரப் பூக்கள் வயிற்றுப்புண் போக்கும்!
தழையின்நீர் வெப்பந் தணிக்கும்! - மழைநீரைச்
சேர்த்துவைக்கும் ! எண்ணை, சிரங்குபடை, குட்டரோகம்
தீர்த்திடும் பத்தியமாய்ச் சேர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.05.2022