புதன், 21 ஏப்ரல், 2021

ஊடலும் கூடலும்! தெம்மாங்கு! (சிந்துப்பா)

 

தெம்மாங்கு! (சிந்துப்பா)

.
ஆசையினை விதைவிதைத்தே அன்பாலே நீரிறைத்தே
ஓசையின்றி வளர்ந்துவந்த மானே!  - என்னுள்
ஒளியாக நிறைந்திருக்கும் தேனே!
.
எத்தனையோ வேளையினுள் எந்நாளும் இருந்தாலும்
பித்தனுன்னை மறக்காத தேனோ?  - இந்தப்
பிடிவாத குணமுனங்குந் தானோ?
.
விட்டுவிட்டுப் போனவனை விரும்பாமல் மறந்தவனைத்
திட்டித்தினந் தீர்த்துநிற்கும் உள்ளம் - அவனைத்
தேடுகிற கண்களுள்ளே கள்ளம்!
.
ஆத்ததாண்டிப் போகவேணும் அன்னவனைக் காணவேண்டும்
ஏத்தமிட்ட நெஞ்சிலுள்ள பாரம் - காண
இன்பமழை கொட்டும்விழி யோரம்!
.
பார்த்தவுடன் தெரியாமல் பதுங்கியுடன் ஒளிந்தாலும்
பூத்தவுடன் தெரிந்துவிடும் வாசம்!  - கண்கள்
பொதிந்தவுடன் புரிந்துவிடும் நேசம்!
.
ஊடலுடன் இருந்தாலும் உயிர்கலந்து விட்டதினால்
கூடலினை எண்ணிமன மேங்கும்! - கண்ணால்
கொஞ்சிவிட நெஞ்சமன்று தூங்கும்!
.
அன்றுமில்லை இன்றுமில்லை என்றுமில்லை எந்நாளும்
முன்னவர்கள் சொன்னதுதான் உண்மை! - வாழ்வில்
முத்தொளிரும் அனுபவமே திண்மை!
.
கொடுத்துவிடப் பொருள்குறையும் குளிரன்பை விழிவழியில்
தொடுத்துவிட வளர்ந்துவரும் என்றும்! - எங்கும்
தொலையாமல் திரும்பிவரும் இன்றும்!
.
கண்ணென்னும் வண்டிரண்டும் கவியென்னும் மலர்மொய்க்க
உண்ணென்று கொடுப்பதுவே புலமை! - பண்ணை
உலகாள வைப்பதுவும் வளமை!
.
சிந்தனையில் தேன்கலந்து செந்தமிழில் சீர்கலந்து
வந்துதித்த தெம்மாங்குப் பாட்டு!  - உள்ள
வருத்தம்போக வேண்டுமிதைக் கேட்டு!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2021

வியாழன், 15 ஏப்ரல், 2021

திருவாழிச் சித்திரகவி!

 


பணிவோடு பாடினேன் பாட்டு!
.
வேங்கடவா என்றுன்னை வேண்டிவந்தால் வேதையெல்லாம்
வாங்க அனுதினமும் வந்திடுவாய்! - தூங்கும்
பணிகளை ஓங்கி உயிர்ப்பாக் குமுனைப்
பணிவோடு பாடினேன் பாட்டு!
.
பாவலர் அருணா செல்வம்
16.04.2021
.
பாடல் 70  எழுத்து 67

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கும்பச் சித்திரகவி!

 



பதியாகக் காக்கும் கணபதியே!
.
தாயே உன்துதிக்கை தருமே லமே!
மாயே உனைவங்க மாறிடும் வினைளே!
பூவே கொடுக்கும் போதை எமக்கு!
நாவே காக்கும் காக் வியே! நீயே
விதிமணி மதிவான்தேன்! வா!நின்மேன் நியாதி
பதியாகக் காக்கும் கணபதியே!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2021

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

மீன் சித்திர கவிதை!



பாடிடப் பாடுவாள் பன்னிசை யோடே!
.
டே இன்வாயோ ! எழுத்தே இசையமுதோ!
பீடே பின்னிய பெருமொழியோ நற்றேன்!
இன்பம் பெருகிடு மின்ண் தமிழால்
துன்பம் துள்ளியே தோய்ந்துட னோடும்!
வான்தரும் வளம்போல் கூடும் நலமெலாம்!
தேன்போல் பாமகள் தின்றிடு மினிப்பை
ஓடியோடித் தே,வுயிர்த் துடிக்கும் பாவைநீ
பாடிடப் பாடுவாள் பன்னிசை யோடே!
.
பாவலர் அருணா செல்வம்
10.04.2021