.
தென்னை மரம்முழுதும் சீராய் பயன்தரும்!
தென்னம்பூ பாளை தேடியதைத் - தின்னக்
குடலிறக்கம் பேதி குணமாகும்! சூட்டின்
உடலெரிச்சல் போக்கும் உணவு!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022
(கைதை என்பது தாழம்பூ
தாழை என்பது தென்னந்தாழை)
.
தென்னை மரம்முழுதும் சீராய் பயன்தரும்!
தென்னம்பூ பாளை தேடியதைத் - தின்னக்
குடலிறக்கம் பேதி குணமாகும்! சூட்டின்
உடலெரிச்சல் போக்கும் உணவு!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022
(கைதை என்பது தாழம்பூ
தாழை என்பது தென்னந்தாழை)
காட்டுத்தீப் போல்பூத்துக் காய்க்கும் பலாசமரம்!
வீட்டுக் கழகாய் விளைகியது! - கூட்டிவைத்த
காய்ந்த மலர்களைக் காய்ச்சிக் குடித்துவர
நோய்பல ஓடும் நொடிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.02.2022
நார்ச்சத்து மிக்க நலந்தரும் பீர்க்கங்காய்
பார்வையை மேலும் பலப்படுத்தும்! - நீர்த்தன்மை
மிஞ்சும் உடலை மெலியவைக்கும் வாசமற்ற
மஞ்சள் நிறப்பூ மலர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.02.2022
மலமிளக்கும்!
வாயு வயிற்றுநோய் போக்கி
நலந்தருங்
கொன்றை நமக்கே! - உலர்ந்த
இலையுடன்
பூவும் இளைத்த உடல்தேற்றும்!
மலையளவு
உள்ளதிதில் மாண்பு!
.
பாவலர்
அருணா செல்வம்
31.01.2022