வியாழன், 10 ஜனவரி, 2019

பொது நீங்கு உவமை! - 23





   ஒரு பொருளுக்கு உவமையைக் கூறிப், பின்பு அதனை மறுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பொருளையே தனக்குத் தானே உவமையாகக் கூறுவதுபொது நீங்கு உவமைஎனப்படும்.
(உண்மை உவமை என்பது உவமையைக் கூறிப் பின்பு மறுத்து அது பொருள்தான் எனக்கூறுவது. ஆனால் இது, பொருளைக் கூறி பின்பு மறுத்து அந்தப் பொருளையே தனக்குத் தானே உவமையாகக் கூறுவது)

உ. ம்
உடலுக்குத் தேக்கும் உறுதிக்கு அதனின்
திடமும் குறைதான்! தெளிந்துதொடர்உயர்
ஏறும் உனக்குவமை நீயே நிறையென்று
கூறுவேன் உள்ளம் குளிர்ந்து!

பொருள்தேக்கு மரத்தைப் போன்ற உடலும், அதன் திடமான தன்மையைப் போன்ற உறுதியும் என்று உன்னைக் கூறுவது குறைதான். உன் தெளிந்த அறிவால் தொடர்ந்து உயர்வுகளைத் தொட்டிடும் உனக்கு உவமை நீயே என்று நிறையோடு உள்ளம் குளிர்ந்து கூறிடுவேன்.
    உடலுக்கு மரத்தையும், உறுதிக்கு அதன் திடத்தையும் உவமைக் கூறிப் பின்பு அது குறைதான் என்றும், ஒரு மரத்தினால் தெளிவான உயர்வுகளைப் பெற முடியாது என்ற காரணத்தினால் அதைவிட உனக்கு நீயே உவமை என்று கூறியதால் இது பொது நீங்கு உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக