மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 அக்டோபர், 2014

இம்சை தத்துவங்கள்!! – 2



1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.

2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....

3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...

4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.

5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?

6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.

7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....

8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....

9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....

10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....

11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...

12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.

14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.

15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....


இந்தப் பதிவு ஒரு ஜாலிக்காக.....

கடைசியா எனக்கு ஒரு சந்தேகம்ங்க..... பதில் சொல்லுங்க....ப்ளீஸ் 

    அதாவது ரொம்ப நாளா கண்ணி வெடி கண்ணி வெடின்னு சொல்லுறாங்களே.... இன்னுமா அதுக்குக் கல்யாணம் ஆகலை.......???!!!

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

எல்லோரும் ஓடி வந்து பாருங்கள்!!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
   நான் சொல்லப்போகிற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியையோ ஆச்சரித்தையோ கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. இது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆச்சர்யம்....
   என்னவென்று யோசிக்கிறீர்களா.....? சொல்கிறேன். சொல்கிறேன்.
   கடந்த 31.10.2010 அன்று நடந்த கம்பன் விழாவில்

சீர்மணக்கும் செந்தமிழின் யாப்பைக் கற்று,
    பார்மணக்கும் பாட்டெழுதிச் சங்கம் சான்ற
பேர்மணக்கும் பெரும்புகழைப் பெற்று! மின்னும்
    தேர்மணக்கும் திருமகளின் அருளை ஏற்று!
தார்மணக்கும் சொல்லாற்றல்! ஒளிரும் பண்பாம்
    வேர்மணக்கும் எழுத்தாற்றல்! குளிரும் இன்பக்
கார்மணக்கும் கவியாற்றல் கமழ்ந்து வாழும்
    கவிதைப்பெண் உயர்அருணா செல்வம் வாழ்க!

என்று வாழ்த்தி, “கவிதைப்பெண்“ என்ற விருதை கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் எனக்கு வழங்கினார்.

  அதற்கு முன் 2006 ம் ஆண்டு “சிறந்த பேச்சாளர்“ என்ற விருதையும் கம்பன் கழகம் வழங்கியது. (அதற்கு முன்பே வீட்டில் “வாயாடி“ என்ற பட்டம் சான்றிதழ் இல்லாமலேயே இருப்பது அவர்களுக்குத் தெரியாது)
  பிறகு வலைப்பு திறந்த புதியதில் நண்பர் செய்தாலி அவர்கள் ஒரு விருதை வழங்கினார்.
   இப்பொழுது மீண்டும் ஒரு விருது!!
   தோழி அம்பாளடியாள் அவர்கள் அன்புடன் எனக்கு இந்த விருதை வழங்கியுள்ளார். இதைப் பார்க்கத் தான் உங்கள் அனைவரையும் ஓடி வரச் சொன்னேன். உங்களுக்கு இது ஆச்சர்யமான விசயம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய ஆச்சர்யம். காரணம்..... நான் முதன்முதலில் ஒரு பெண்ணிடம் இருந்து விருது பெற்றிருக்கிறேன் என்பது தான்...


மிக்க நன்றி தோழி!!

   தவிர, விருது பெற்ற அனைவருக்கும் இதன் நிபந்தனைகள் தெரியும். அதனால் நான் விளக்கவில்லை. நான் மிகவும் தாமதமாக வந்ததால் நான் விருது கொடுக்க நினைத்த அனைவரும் இரண்டு மூன்று முறை அதே விருதை வாங்கி விட்டிருக்கிறார்கள். அதனால் நான் யாருக்கு விருதைக் கொடுப்பது என்று அறியாமல் என் விருதை மட்டும் என் வலையில் வைத்துவிட்டேன்.

   அடுத்து என்னைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டுமாம்.
   உண்மையில் என்னைப்பற்றி எனக்கே தெரியவில்லை. நான் யார்? எங்கிருந்து வந்தேன்?...... என்றெல்லாம் (யோசித்து யோசித்து யோசித்துக்கொண்டே இருந்தாலும்..... அதையெல்லாம்) சொல்லி உங்களைக் கடுப்பேத்த மாட்டேன்.
   இதெல்லாம் இல்லாமல், என் பெயர் அருணா. என் கணவர் பெயர் என்செல்வம். எனக்குத் தமிழ்...... என்று எழுதினால்.... இதெல்லாமும் உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
   அதனால் வித்தியாசமாக எனக்குப் பிடித்த உணவுவகைகளை எழுதிவிடுகிறேன்.

1.நிறைய முந்திரி போட்ட பாயாசம்.
2. ஐஸ் கிரிம் ( ஜிகிர்தண்டா ஐஸ்கிரிமை நம் பதிவர் சந்திப்பில் கொடுக்க இருக்கிறார்களாம்.... ம்ம்ம்.... எனக்குத் தான் அதைச் சாப்பிட கொடுப்பனை இல்லை.)
3. இஸ்லாமிய சகோதரிகள் செய்யும் மட்டன் பிரியாணி.
4. என் அம்மா எனக்காகச் செய்து தரும் மட்டன் சாப்ஸ்.
5. வஞ்சர மீன் வறுவல்.
6. நெய் சொட்டச் சொட்ட இருக்கும் சிகப்பரிசி “தொதோல்“
7. முறுவல் தோசை அதற்கு தேங்காய் சட்னி......
   இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..... படிப்பவர்களுக்குக் கோபம் வரும் என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் இதையெல்லாம் ஏன் இங்கே சொன்னேன் என்று சிலருக்குத் தோன்றும் இல்லையா..... அது ஒன்றுமில்லைங்க.... என்றாவது ஒருநாள் நான் இந்தியா வந்து உங்களில் யாரையாவது சந்தித்தால் இதில் ஒன்றைச் செய்துத் தருவீர்கள் என்ற நட்பாசை தாங்க.

அன்புடன்
அருணா செல்வம்
17.09.2014

    

புதன், 23 ஜூலை, 2014

இம்சை தத்துவங்கள்!! (இது வெறும் மொக்கை)



1. டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...

2. பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... நான் கேட்கிறேன்.... அப்போ பிச்சைப் போடுறவன் பிச்சைக்காரனா?

3. என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் “சுட்டு“தான் சாப்பிடனும்.

4. என்ன தான் “தி மு க“ காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது “அம்மா“ என்று தான் கத்தும்.

5. நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.

6. ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.

7. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் சரி. அது தியேட்டரில் ரிலீஸ் ஆகாது.

8. தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டைலர்கள் என்று சொல்லக்கூடாது.

9. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்குத் தலையில கொம்பு முளைக்காது.

10. நான் கேட்கிறேன்.... கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?

சும்மா ஒரு மாறுதலுக்காக..... யாரும் கல்லை எடுக்காதீங்க.... ப்ளீஸ்....


அருணா செல்வம்.


செவ்வாய், 11 மார்ச், 2014

தலைவலி!!




நெற்றிப் பொட்டின் மத்தியிலும்
   நீண்ட வகிட்டுக் குள்ளேயும்
சுற்றிப் பார்க்கும் கண்களையும்
   சுற்றி வலித்த தலைவலியால்
வற்றிப் போன குளம்போல
   வலியால் மண்டை வெடிக்கிறது!
கற்றைக் குழலைத் தலைதாங்கும்
   கடுக்கும் வலியைத் தாங்கிடுமா?

வலையில் எழுத அமர்ந்தாலும்
   வகையாய் சமைக்கப் போனாலும்
அலையில் பேச நினைத்தாலும்
   அமைதி யாகப் படுத்தாலும்
தலையில் ஏன்தான் இவ்வலியோ
   தனித்து நானே சிந்தித்தேன்
விலையே இல்லா வலைதளத்தில்
   விழாமல் போன வாக்கினாலா?


அருணா செல்வம்.

11.03.2014