செவ்வாய், 8 ஜனவரி, 2019

இன்சொல் உவமை! - 13




     பாடலில் ஒரு பொருளுக்குக் கூறிய உவமையை மேலும் மிகுதியாக உவமித்துவிட்டு, இந்த மிகுதியைக் கொண்டிருந்தாலும் இந்த உவமை அந்த பொருளுக்கு ஒப்பியிருப்பதால் உயர்ந்தது என்று சொல்வதுஇன்சொல் உவமைஆகும்.

உ. ம்
குன்றெனத் தோளிரண்டும் கொண்டவனே! குன்றின்மேல்
என்றும் பசுமை படர்ந்திருக்கும்! – என்னவனே!
உன்உயர்ந்த தோளுக்கே ஒப்பாக வந்ததன்றிக்
குன்றுக்கு உயர்வுண்டோ கூறு!

பொருள்குன்று போன்ற இரண்டு தோள்களைக் கொண்டவனே ! குன்றின் மேல் பசுமை என்றென்றும் படர்ந்திருக்கும். என்னவனேசொல்வாயாக. குன்று பசுமைகளைக் கொண்டிருந்தாலும் உன்உயர்ந்த தோள்களுக்கு ஒப்பாக வந்தது அன்றி அதற்கு வேறு என்ன உயர்வு இருக்கும்.
     இப்பாடலில் கூறப்பட்ட பொருள் தோள்கள். உவமப்பொருள் குன்று. தோள்கள் குன்றை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் குன்றுகளோ என்றென்னும் பசுமைகளான மரம் செடி கொடி போன்றவைகளைத் தாங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் தோள்களை விட குன்றுகள் உயர்ந்திருக்கிறது. இருந்தாலும் குன்றுகள் தோள்களுக்கு உவமையானது இல்லாமல் வேறு உயர்வு அதற்கு இல்லை என்றதால் இது இன்சொல் உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக