வியாழன், 10 ஜனவரி, 2019

ஒருவயிற்போலி உவமை! - 21




    பாடலில் ஒரு தொடர் மொழியைக் கூறிப் பாடலைச் சொல்லும் போது, அதில் வரும் பல உவமைகளுக்கு உவம உருபு விரிந்து வராமல் தொகையாகவே இருந்து, ஒரே ஓர் உவமையை மட்டும் உவம உருபு வருமாறு விரித்துக் கூறுவதுஒருவயிற் போலி உவமை“ எனப்படும். ஒருவயிற்ஓரிடத்தில் மட்டும்.

. ம்
மங்கையிதழ் பூக்கள்! குழலூதும் வண்டுகள்!
தங்கஇழை திங்களொளி தொங்கிடும்! – சங்கமித்த
மாலைமலர் வாசம் மனமயக்கும்! இவ்வெழில்
சோலைபோல் என்னகத்தைச் சொல்!

பொருள்மங்கையின் இதழைப் போன்ற பூக்கள், குழலின் இசையைப்போன்ற ரீங்காரமிடும் வண்டுகள், மரங்களில் தங்க இழையைப் போலத் தொங்கிடும் சூரியனின் ஒளி, பல மலர்களை ஒன்று கூட்டிக் கட்டியது போல் வாசம் மனத்தை மயக்கிடும். இவ்வளவு எழில் பொருந்திய  சோலையைப் போல என்தன் உள்ளம் அழகாய் இருக்கிறதென்று சொல்.
    பாடலில். மங்கை இதழைப்போல, குழலோசையைப் போலத் தங்க இசையைப் போல, மலர்களைப் போல, என்று எவ்விடத்திலும் விரியாமல் இந்த எழிலான சோலையைப் போல என்று ஒரே ஓர் இடத்தில் மட்டும் உவம உருபாகிய போல என்பது விரிந்து வந்துள்ளதால் இது ஒருவயிற்போலி உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக