செவ்வாய், 8 ஜனவரி, 2019

விபரீத உவமை! - 14




பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பிஃதவம மாகும்             (தொல்பொருள்உவம – 9)

     பாடல்களில் பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் உவமைகளைப் பொருளாகவும், பொருட்களை உவமையாகவும் மாற்றி உரைப்பதுவிபரீத உவமைஆகும்.

உ. ம்
கருங்கூந்தல் போலிருக்கும் கார்மேகம்! சின்னக்
கருவிழி போல்வண்டு காணும்! – புருவம்போல்
வண்ண வளைவுடன் வானவில்! ஈடில்லா
மண்ணில் இயற்கையின் மாண்பு!

பொருள்கருமையான கூந்தலைப் போலிருக்கும் கார்மேகம் கலைந்தோடும். சிறிய கருமையான விழிபோன்று வண்டு காணப்படும். புருவம் போல் வளைந்த வண்ண வானவில் இருக்கும். இப்படி இருப்பது ஈடில்லா இவ்வுலகத்தில் இயற்கை கொடுத்த அழகு.
    தொன்றுதொட்டு (மேற்றொட்டு) பெண்களின் கூந்தலுக்குக் கார்மேகத்தையும், கருவிழிக்கு கருவண்டையும், புருவத்திற்கு வானவில்லையும் உவமையாகக் கூறி வருதல் வழக்கம்.
    இப்பாடலில் அந்த இயல்புகளை மாற்றி, கார்மேகத்திற்கு உவமையாக கூந்தலையும், வண்டுக்கு உவமையாக கண்களையும், வானவில்லுக்கு உவமையாக புருவத்தையும் கூறியுள்ளதால் இது விபரீத உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக