மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
மென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்!
தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்,
தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!
வானோடு வகைமாறும் மேக வண்ணம்
வடிவழகில்
மாற்றமிடும், அவளைக் கண்டால்
மானோடு மயிலாடும் சோலை ஏங்கும்
மலர்ப்பாதம்
தன்மீது படுமா என்றே!!
அருணா செல்வம்
11.10.2013
