ஒருவர் தன்னைத்
தானே புகழ்ந்து கொள்வது
“தன்மேம்பாட்டுரை அணி“
எனப்படும்.
உ.ம்
என்னிகர் ஆடுவோர்
இங்குண்டோ? என்நடனம்
மின்னல்போல் கண்ணுள்
விரைந்திடும்! – என்விரல்
காட்டிடும் ஆடல்
கலைநயம் வேறெந்த
நாட்டிலும் இல்லையென்பேன்
நான்!
பொருள் – எனக்கு
நிகராக நாட்டியம் ஆடுபவர்
இங்கு இருக்கின்றனரா ? நான்
ஆடும் நடனம் வானத்தில்
தோன்றிடும் மின்னலைப் பார்ப்பது
போல் விரைவாக நடந்து
கண்ணுக்குள் கமழும். என்
விரல் காட்டும் கலைநயம்
மிக்க நாட்டிய பாவனைகள்
வேறெந்த நாட்டிலும் காட்டுவதற்கு
எவரும் இல்லை என்பேன்
நான்.
பாடலில்
தனக்கு நிகர் நாட்டியம்
ஆடிட வேறு எவரும்
இல்லை என்று தன்னைத்
தானே புகழ்ந்து கொள்ளுவதால்
இது
“தன்மேம்பாட்டுரை அணி“
ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019
