தய்யனா தந்தானந்
தய்யனா தந்தானந்
தய்ய தானந் தானந்
தனதான (ஒரு கலைக்கு)
.
முள்ளிலே செண்டாகும் !
முள்ளிலே செண்டாகும்
மொல்லுடே வண்டாடும்
மௌவ்வம் பூவுந் தேனும் திரளாக
முல்லைவா சம்போலும் சொல்லிலே பண்பாடும்
முல்லை யாகும் பாவும் நிதமூறும்!
பள்ளிலே உண்டாகும்
நல்லதே கண்டாலும்
பைய்ய மேலும் மாறும் நிலைமேவும்!
பைய்யிலே திண்டாடும் தொல்லையே கண்டாடும்
பள்ள மேடுந் தாவும் பலகாலம்!
மள்ளனே உன்னீடும் மல்லலோ நன்றாயும்
வள்ள வேலுந் தோளும் துணையாகும்!
வைய்யமே கொண்டாடும் செல்வமே என்றாடும்
வல்ல நோயுந் தீருங் கடலோரம்!
கள்வனே என்றாலும் வைய்யமே உன்பாதம்
கவ்வும் பேருஞ் சீரும் பெரும்வாழ்வு
கர்வமோ உண்டாகும் முல்லையே செந்தூரின்
கல்வி யாளும் வீரன் பெயராகும்!
.
பாவலர் அருணா செல்வம்
28.05.2023
மொல்லு - இரைச்சல்
மௌவ்வம் - தாமரை மலர்
முல்லை - வெற்றி