கவிஞர் அருணா செல்வம்
கதம்ப வலை
வெள்ளி, 31 ஜனவரி, 2025
புதன், 29 ஜனவரி, 2025
செவ்வாய், 21 ஜனவரி, 2025
திங்கள், 13 ஜனவரி, 2025
பொங்கல் வாழ்த்து 2025
பொங்கிப்
பொங்கி வழிந்து
பொலிந்தாடும் ! நன்மை
தங்கித்
தங்கி நிறைந்து
தழைத்தாடும் ! அன்பில்
முங்கி
முங்கி மனது
மொழிந்தாடும் ! சொந்தம்
இங்கும்
அங்கும் இணைந்து
இசைப்பாடும் இன்பம் !
.
தின்னத்
தின்ன இனிக்கும்
தேங்கரும்பாய் ! வாழ்வு
மின்ன
மின்ன ஒளிரும்
மேனிலையாய் ! எண்ணம்
பொன்னும்
பூவும் பொழியும்
பூங்குணமாய் வேண்டும்
என்று
நெஞ்சம் நிறைய
வாழ்த்துகின்றேன் வாழ்த்து !
.
மரபுமாமணி
அருணா
செல்வம்
14.01.2025
புதன், 1 ஜனவரி, 2025
புத்தாண்டு வாழ்த்து 2025
தித்திக்கும்
இன்பம் பொங்கும்
தேனான வாழ்க்கை மின்னும்
புத்திக்குள்
நன்றே எண்ணும்
புகழோடு நலமுஞ் சேரும்
எத்திக்கும்
நம்பேர் பாடும்
ஏற்றமெல்லாம் என்றும் காணும்
அத்தனையும்
பெற்று வாழ
அனைவரையும் வாழ்த்து கின்றேன் !
.
மரபுமாமணி
அருணா
செல்வம்
01.01.2025
ஞாயிறு, 29 டிசம்பர், 2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)