வியாழன், 23 மே, 2019

கூடா இயற்கை!



வேற்றுப்பொருள் வைப்பு அணி!
.
பாடலில் கூடாதவைகளைக் கூடுவதாக்கிக் கூறுவதுகூடாவியற்கைஎனப்படும்.

. ம்
உணவே மருந்தாம் உலகே சிறையாம்
துணையே வெறுப்பாம் துறவர்க்கு! – இணையில்லாக்
கல்வி பெறாதவன் கண்ணிருந்தும் வன்குருடன்
நல்லுலகம் சொல்லும் நயந்து!

பொருள்உலக வாழ்க்கையில் வாழ்வதற்கு வேண்டிய உணவு மருந்தாகவும் இருப்பிடம் சிறையாகவும் வாழ்க்கைத் துணையோ தேவையில்லா சுமையாகவும் துறவு பூண்டவர்களுக்கு இருக்கும். உலகில் கண் இருந்தும் கல்வி பெறாதவனைக் குருடன் என்று உலகமானது நயந்து சொல்லும்.
    பாடலில் உணவும், இருப்பிடமும், துணையும் மனிதருக்கு இன்பத்தைத் தருவதாக இருப்பவைகள். அவைகள் துறவு பூண்டவருக்குத் துன்பத்தைத் தரும் என்பது சிறப்புப்பொருள். உலகில் இணையில்லாத கல்வியைப் பெறாதவனை இவ்வுலகம் கண் இருந்தும் குருடன் என்று உரைக்கும் என்று உலகறிந்த பொதுப்பொருளை அதன் மேல் ஏற்றி வைப்பதால் இது வேற்றுப்பொருள் வைப்பாகியது. உணவு இருப்பிடம் துணை ஆகியவை இன்பத்தைத் தருவன. ஆனால் அதற்கு கூடாத தன்மைகளைக் கூடுவதாகக் கூட்டி உரைத்ததால் இதுகூடா இயற்கைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.05.2019


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக