புதன், 9 ஜனவரி, 2019

பல பொருள் உவமை! - 16




    பாடலில் ஒரு பொருளுக்குப் பல உவமைகளைக் காட்டிப் பாடுதல்பல பொருள் உவமைஆகும்.

. ம்
முத்தும் பளிங்கும் முதிர்ந்த அரும்புகளும்
கொத்தான விண்மீனின் கூட்டமும்மொத்தமாய்ச்
சேர்ந்தமர்ந்து விட்டதுபோல் சின்னவளின் செவ்வாயுள்
சீர்பற்கள் மின்னும் சிரிப்பு!

பொருள்சின்னப்பெண்னவள் செவ்வாய் திறந்து சிரிக்கும் போது மின்னும் பற்களானது முத்துக்களும், பளிங்குக் கற்களும், மொட்டவிழா முதிர்ந்த மலர் அரும்புகளும், வானத்தில் உள்ள விண்மீன் கூட்டமும் மொத்தமாய் வந்து அங்கே அமர்ந்தது போல் உள்ளது.
     பாடலில் வந்திருக்கும் பொருள் பற்கள். அப்பற்களுக்கு முத்து, பளிங்கு, அரும்பு, விண்மீன் என பபொருட்களையும் உவமையாகக் கூறப்பட்டு வந்துள்ளதால் இதுபால பொருள் உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக