திங்கள், 20 ஜூன், 2016

விருதுகளும் அதன் பெருமைகளும் !




பாரத ரத்னா விருது
    இந்திய அரசால் கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்வில் சிறந்த பணி இவற்றில் சிறப்பாகச் செயல் படுவோருக்கு இது அளிக்கப்படுகிறது.

பத்ம விபூஷன்
    மத்திய அரசால் எந்த துறையிலும் தனிச்சிறப்பு அடையும் பெருமக்களுக்கு அளிக்கப்படும் விருது இது.

பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள்
    மத்திய அரசால் கலை, இலக்கியம், இசை, விளையாட்டு, பொதுச்சேவை மற்றும் அறிவியல் துறைகளில் தனிச்சிறப்பு அடையும் பெருமக்களுக்கு வழங்கப்படுகிறது.

பாரதீய ஜன்பத் விருது
    இந்திய மொழி பற்றிய கட்டுரைக்கும், இந்திய தத்துவம் மற்றும் புத்தகத்திற்கும் தொழிலதிபர் சாந்தி பிரசாத் ஜெயின் என்பவரால் அளிக்கப்படும் விருது இது. இது 2.5 லட்சம் பண முடிப்பு ஆகும்.

தாதே சாகேப் பால்கே விருது.
    திரைப்படத் துறையில் சிறப்பாகச் செயல்படும் நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு இந்திய திறைப்பட துறையின் பாட்டனார் என்று அழைக்கப்பட்ட தாதா சாகேப் பால்கேவின் நினைவாக இந்திய அரசாங்கம் தரும் விருது இது.

வீரத்திற்கான விருதுகள்
    வீரச் செயல் புரிந்தவர்களுக்கு பரம் வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர சக்ரா, அசோக சக்ரா விருதுகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இராணுவச் சேவையில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

பி.சி.ராய் விருது
    மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்திரா காந்தி விருது
    தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

அர்ஜீனா விருது
    சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

தேசிய சினிமா விருது
    சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், குழந்தை நடிகர், மற்றும் துணை நடிகர்களுக்காக வழங்கப்படும் விருது இது.

மத்திய சாகித்ய அகாடமி விருதுகள்
    இந்திய அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படுகிற விருது இது.

பிர்லா விருது
    மனித நேயத்திற்காக ஜி டி பிர்லா விருது வழங்கப்படுகிறது.

கோயங்கா விருது
    பத்திரிக்கைத் துறையின் சிறந்த சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

நோபல் பரிசு
    விருதுகளில் தலைசிறந்த விருது நோபல் பரிசு விருது ஆகும். இது ஆல்பிரட் பெர்னாடு நோபல் என்கிற ஸ்வீடன் நாட்டு வேதியியல் மற்றும் பொறியியல் வல்லுநரின் நினைவாக இவர் விருப்பத்தடன், அவர் இறந்த பிறகு வழங்கப்படுகிறது.
    இயற்பியல் வேதியியல் மற்றும் மருத்துவத் துறையில் சிறந்த சேவைக்காகவும்,
    எழுத்துத்துறையில் சிறந்த பணிக்காகவும்,
    உலக அமைதிக்காகவும் சிறப்பாகப் பணியாற்றும் பெருமக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஞானபீட விருது
    இந்திய அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது.

டாக்டர் இராதாகிருஷ்னன் நல்லாசிரியர் விருது.
    தமிழக அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்படும் விருது இது.

அண்ணா விருது.
    தமிழக அளவில் காவல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் விருது இது.

தெரிந்ததைத் தெரிவித்தேன்
அருணா செல்வம்.

கொசுறு

   நான் ஏன் இந்த விருதுகளைப்பற்றி எழுதினேன் என்றால்….. எனக்கும் ஒரு விருது கிடைத்தது.
   நான் கடைசியாக வெளியிட்ட வேலியில்லாப் பயிர் என்ற புத்தகத்திற்கு, அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு BEST APPRECIATION AWARD வழங்கி சிறப்பித்துள்ளது என்பதை மகிழ்வுடன் உங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நன்றியுடன்

அருணா செல்வம்