வியாழன், 19 டிசம்பர், 2019

கரகாட்டம்!



.
தலையிலே சுமைசுமந்து
தளராமல் ஆடிடுவார்!
கலையிலே பண்பாடாய்
காட்டிவிட்ட ஆட்டமிது!

ஒலிக்கின்ற ஓசைக்கே
உணர்வளித்து ஆடிடுவார்!
கலிகால நடப்புகளைக்
ஆட்டத்தில் காட்டிடுவார்!

கிராமத்துக் கலையுணர்வு
கவிஞனையும் பாடவைக்கும்!
இராக்கால வேளையிலும்
இயல்பாக பார்க்கவைக்கும்!

எத்தனையோ இன்னல்கள்
எல்லோருக்கும் உண்டன்றோ!
அத்தனையும் தலைசுமந்து
இத்தரையில் வாழ்கின்றார்!

என்றான உணர்வுகளை
எடுத்தோதும் ஆட்டமிது!
நன்றான கலையாகும்
நம்நாட்டின் அடையாளமே!
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக