செவ்வாய், 14 ஜூன், 2022

தோழ தோழியருக்கு வணக்கம் !

 



     கடந்த சில நாட்களாக கி.பி மூன்றாம் நுற்றாண்டில் பத்துப்பாட்டுத் தொகுப்பில் அடங்கிய கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு என்ற நுலில் இருந்த 99 மலர்களின், அவர் அக்காலத்தில் குறிப்பிட்ட பெயரையும். அதையே நாம் இக்காலத்தில் அறிந்திருக்கும் பெயருடன், அம்மலரின் அல்லது அம்மரத்தின் பயனையும் நேரிசை வெண்பாவாக எழுதிப் பதித்திருந்தேன். இதில் “வாரம்“ என்ற மலரைப்பற்றி இணையத்தில் தேடியும் தெரிந்தவர்களிடம் கேட்டும் என்னால் அறியமுடியவில்லை. அதனால் அம்மலரை மட்டும் நான் எழுதவில்லை.
    மற்ற 98 மலர்களை அனேகமாகச் சரியாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறு இருப்பின் மன்னித்துச் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
     தவிர, என் பாடல்களைப் படித்து அதற்கு விருப்பக் குறியிட்டும் கருத்துக்கள் எழுதியும் என்னை ஊக்குவித்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
நன்றியுடன்
பாவலர் அருணா செல்வம்
14.06.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக