வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனா இருந்தும் உயர்வோமடி!



(கொரோனா கண்ணிகள்)
.
தொற்ற ஒற்றிக்கொள்ளும்
தொடர்கதை யாக்கிவிடும்
பற்று நிறைந்ததடீ - கொரோனா
பண்பில் அரக்கனடீ!

காற்றில் பறக்காமல்
கண்டவர் தும்பலிட
வேற்றெனப் பார்க்காதடீகொரோனா
விரும்பியே சேருமடீ!

கண்ணுக்குக் கிட்டாமல்
கைத்தொட ஒட்டியுடன்
உண்டிடச் சேருமடீகொரோனா
உற்றிடக் கொல்லுமடீ!

வாயினுள் சென்றவுடன்
வாழ்ந்திடும் நெஞ்சினுள்ளே
நோயினைக் கூட்டுமடீகொரோனா
நுண்ணியக் கிரூமியடீ!

மூச்சுக் குழாயுள்ளே
மூடி அடைத்திட்டுப்
பேச்சை நிறுத்துமடீகொரோனா
பின்னிடும் வேகமடீ!

இன்ப உலகில்உள்ள
இனிமை சுகத்தைவிட்டுத்
துன்பமேற் காதடீகொரோனா
தொல்லை அழிப்போமடீ!

கைக்கூட்டும் செய்கையினைக்
கண்டதும் விட்டுவிட்டுக்
கைக்கூப்பு வோமடீகொரோனா
லங்கியே ஓடுமடீ!

கொள்ளைப் பெருநோயால்
கூட்டங்கள் போடாமல்
தள்ளி யிருப்போமடீ – கொரோனா
தானாய் இறக்குமடீ!

அன்பு நிறைந்திருக்கும்
அரசின் வழித்தன்னில்
ஒன்று சேர்வோமடீ  – கொரோனா
ஓடிடச் செய்வோமடீ!

நம்மை அறிந்துகொண்டு
நன்மை புரிந்துவிட்டால்
இம்மை நலம்தானடீ – கொரோனா
இருந்தும் உயர்வோமடீ!
.
பாவலர் அருணா செல்வம்
27.03.2020

1 கருத்து: