வியாழன், 26 மார்ச், 2020

கொம்படைந்த வெண்பா!





நெற்பையோ கொம்படைய நெஞ்சம் மயங்கிடும்!
நற்சொல்லோ கொம்படைய நற்பிரிவாம்! – பற்றுடைய
தேனமைதி கொம்படைய சேறுமினம்! கானகத்தின்
தானழகு கொம்படைய தா!
.
நெற்பைசாக்கு கொம்படைய சொக்கு
நற்சொல்பதம் கொம்படைய பேதம்.
அமைதிசாந்தம் கொம்படைய சொந்தம்.
கானகம்காடு கொம்படைய கொடு.
.
பாவலர் அருணா செல்வம்
26.03.2020

(கொம்படைதல் என்பது தமிழில் உள்ள கொம்பில்லாச் சொற்களில் கொம்பினைச் சேர்த்தல் என்பதாகும். உதாரணமாககாடைஎன்ற சொல்லில் கொம்பைச் சேர்த்தால் கொடைஅல்லதுகோடைஎன வரும். வெண்பாவில் கொம்பில்லாச் சொல்லும் கொம்படைந்த சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களைக் கொண்டு பாடப்படுவதுகொம்படைந்த வெண்பாஎனப்படும்.)

1 கருத்து: