புதன், 15 மே, 2019

இருபொருள் வேற்றுமைச் சமம்!



வேற்றுமை அணி!

    பாடலில் இரண்டு பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்கு உள்ள ஒப்புமையைக் கூறிப் பின்பு இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூறி, இரண்டிற்கும் இவ்விரண்டு வேற்றுமை இருந்தாலும் இரண்டும் சமமே எனத் தோன்றுமாறு பாடுவது இருபொருள் வேற்றுமை சமம்எனப்படும்.

.ம்
மாசின்றி நம்மை மகிழவைத்தும் வாழ்ந்திடக்
காசின்றி நல்லுயிர்க் காக்குமே - வீசிடும்
தன்னலம் இல்லாத் தவழ்காற்று, மற்றொன்று
அன்னையின் கள்ளமில்லா அன்பு!
.
பொருள் உலகினில் மாசு இல்லாமல் நம்மை மகிழவைத்து, நாம் வாழ்ந்திட எதையும் கேட்டு வாங்காமல் நம்மின் நல்ல உயிரினைக் காத்திடும் வீசிடும் தன்னலம் இல்லாத காற்றும் , மற்றொன்று  கள்ளமில்லாத நம் அன்னையின் அன்பும் ஆகும்.
    பாடலில் கூறப்பட்ட இரண்டு பொருட்கள் ஒன்று அன்னையின் அன்பு. மற்றொன்று வீசிடும் காற்று. முன் இரண்டு அடிகளில் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளைச் சொல்லிவிட்டுப் பின்னிரண்டு அடிகளில் ஒன்று அன்னையின் அன்பு என்றும் மற்றொன்று வீசிடும் காற்று என்றும் இரண்டிற்கும் வேற்றுமை சொல்லி வந்திருப்பதால் இரு இருபொருள் வேற்றுமை சமம் ஆகும்.
.
பாவலர் அருணா செல்வம்
15.05.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக