வியாழன், 9 மே, 2019

அயற்காரண விபாவனை ! (இயல்பு)



விபாவனை அணி! 
    பாடலில் எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பொருத்தமான, ஏற்புடைய காரணத்தைச் சொல்லாமல், அதற்கு நிகரான வேறு ஒரு காரணத்தால் சிறப்பித்துப் பாடுவதுஅயற்காரண விபாவனைஆகும். இதனை இயல்பு காரண விபாவனைஎன்றும் கூறுவர்.

. ம்
கண்மூடிக் காட்சிகளைக் காணும்! பெரும்பசிக்கு
உண்ணாமல் மேனி ஒளிர்ந்திடும்! – பண்இன்றி
நெஞ்சம் மகிழ்ந்தாடும்! நேரம் உருளாது
வஞ்சியின் நேசன் வரவு!
.
பொருள்கண்களை மூடிக்கொண்டு காட்சிகளைக் கண்டு மகிழும். நிறைந்த பசிஎடுத்தும் உணவு உண்ணாமலேயே அவளின் மேனி அழகுடன் மிளிரும். இசை இல்லாமலேயே நெஞ்சமானது நடனமாடும். நேரம் போகாமல் இருக்கும் அந்தப் பெண்ணின் மனத்தில் வாழ்பவர் வரும் நேரத்தில்.

    காட்சிகளைக் காண்பதற்கு கண்கள் திறந்தும், உடல் ஒளியுடன் மின்ன உணவும், நடனமாட இசையும், நேரம் ஓடிக்கொண்டே இருப்பதும் தான் உலகின் இயல்பு. இது உலகம் அறிந்த காரணமாகும். ஆனால் பாடலில் இவ்வாறு இல்லாமலேயே அந்த அந்தச் செயல்கள் நடந்தன என்பதால் இதுவிபாவனைஆகியது. இங்ஙனம் நடப்பதற் கெல்லாம் காரணம் அந்தப் பெண்ணின் தலைவன் வரும் நேரம் என்பது உணரப்படுவதால் இதுஅயற்காரணம்ஆயிற்று.
.
பாவலர் அருணா செல்வம்
09.05.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக