செவ்வாய், 21 மே, 2019

முரணித் தோன்றல்!



வேற்றுப்பொருள் வைப்பு அணி!

பாடலில் ஒரு பொருளின் உள்ளேயே மாறுபட்டிருக்கும் இயல்பினை வைத்துப் பாடுவது முரணித் தோன்றல்எனப்படும்.
  
. ம்
அதிகம் கடல்நீரை அள்ளிக் குடிக்க
உதிக்காது நெஞ்சம் உணர்ந்து! – பொதிசுமந்த
ஓட்டையுள்ள கப்பலுக்கு ஒன்பது மாலுமி
கூட்டாய் இருந்தாராம் கூற்று!

அதிக அளவில் இருக்கும் கடல் நீரின் தன்மையை அறிந்த நெஞ்சமானது உப்பச் சுவைக்கொண்டிருப்பதால், அதை அள்ளிக் குடிக்க எண்ணாது. வணிகப் பொருட்களைச் சுமந்த பழுதடைந்து ஓட்டையாகிப் போன கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது சொல் வழக்கு.
   பாடலில் கடல்நீர் அதிகமாக இருந்தாலும் அதை அள்ளிக் குடிக்க முடியாது என்பது சிறப்புப் பொருள். இதனை முடிப்பதற்கு, ஓட்டையான கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் இருந்தாலும் அதனால் பயன் இல்லை என்பது பொதுப்பொருள். சிறப்புப்பொருளின் மேல் உலகறிந்த பொதுப்பொருளை ஏற்றிப் பாடியதால் இது வேற்றுபொருள் வைப்பாகியது. ஓட்டையுள்ள கப்பலுக்கு மாலுமி தேவையில்லை என்பதே இயல்பு. அப்படியின்றி ஒன்பது மாலுமிகள் இருந்தார் என்பதால் இதுமுரணித் தோன்றல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
21.05.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக