செவ்வாய், 4 டிசம்பர், 2018

சாதித்தன்மை அணி!



ஓர் இனத்தின் பலவிதமான தன்மைகளைக் குறித்துப் பாடுவது சாதித்தன்மை அணி எனப்படும். (குரங்கினம், பாம்பினம், மாட்டினம்….)

.ம்.
ஓரிடம் நில்லாமல் ஓடிமரம் தாவிடும்!
கூரிய பல்இளிக்கும்! கோரமுகம்! – சூரிய
செம்பழத்தைத் தேடியதாம்! சீரான வாலினால்
நம்மினத்தில் மாறியது நன்கு!

பொருள் ஓரிடத்தில் நில்லாமல் மரத்திற்கு மரம் தாவிடும். கூரிய பற்கள் காட்டி இளிக்கும். கோரமுகம் கொண்டது. அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் ஒரு காலத்தில் சூரியனைச் சிகப்பான பழம் என்று எண்ணி அதைப்பிடிக்க வானத்தில் தேடி ஓடியது. அதற்கு இருக்கும் வால் ஒன்றினால் தான் மனித இனத்திலிருந்து மாற்றத்துடன் நன்றாய்த் தெரிகிறது. என்று குரங்கு சாதியின் தன்னையை மாறாமல் கூறியதால் இது சாதித்தன்மை அணி ஆகியது.

பாவலர் அருணா செல்வம்
04.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக