வெள்ளி, 28 டிசம்பர், 2018

புகழ் உவமை! - 7


   


பாடலில் வந்திருக்கும் உவமைகளைப் புகழ்ந்து கூறுவதுபுகழுவமைஆகும்.

. ம்
மேலிருந்து கீழ்ப்பாயும் வெண்மயில்போல் நீரருவி
வேலிருக்கும் கூர்,பாறை வீற்றிருக்கும்! – வேலியெனச்
செவ்வேல் முருகனுடன் எந்நாளும் வாழ்வதனால்
எவ்வுயர்வு வேண்டும் இதற்கு!

பொருள்மேலிருந்து கீழ்ப்பாயும் வெண்மயிலைப் போன்ற அருவியும், கந்தனின் வேலில் இருக்கும் கூர்மை போன்று கூர்மை நிறைந்த பாறைகளும் மலையில் வீற்றிருக்கும். உலகின் வேலியென காக்கும் முருகனுடன் இவைகள் எந்நாளும் வாழுவதால் இதைவிட வேறு உயர்வு இதற்கு வேண்டுமா ?
    பாடலில் அருவிக்கு ஒப்பாக வந்த மயிலும், கூர்மையான பாறைகளுக்கு ஒப்பாக வந்த வேலும் முருகனுடன் இருப்பவைகள். மயிலும் வேலும் உவமையாக வந்து அவை இரண்டும் முருகனுடன் எந்நாளும் இருப்பவைகள் என்றும், இதைவிட உயர்வு இதற்கு வேறில்லை என்றும் உவமைகளைப் புகழ்ந்து வந்துள்ளதால் இது “புகழுவமை“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
28.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக