சனி, 29 டிசம்பர், 2018

நிந்தை உவமை! - 8




     பாடலில் ஓர் உவமையைப் பழித்துப் பின்பு அதையே உவமிப்பதுநிந்தை உவமைஆகும்

உ. ம்
பருவமங்கை போல் பசுமையிடும்! பின்னர்
உருவமெழில் கோர உதிரும்! – பெருமரம்
காலத்தின் மாற்றம்போல் காட்சிகளே மாறிடும்
ஞாலம் நடத்தும் நிகழ்வு!

பொருள்பெரிய மரமானது பருவகாலம் வந்ததும் மங்கையைப் போல் பூத்துக் காய் கனி தரும், குளிர்காலம் வந்ததும் இலைகள் உதிர்ந்து தன் பசுமை நிலையின் எழில் அழிந்து நிற்கும். இது காலமாற்றத்தால் உலகத்தில் நடக்கும் நிகழ்வு.
     பாடலில் தொடக்கத்தில் பெரிய மரத்தைப் பருவ மங்கை போல் பசுமையாக இருக்கும் என்று உவமை கூறி, பின்பு அதன் எழிலை அச்சம் தரும் கோரமாய் உதிரும் என்று உவமையை நிந்தித்து வந்துள்ளது. ஆனால் அது அதன் தவறல்ல உலக நிகழ்வு என்று உவமித்ததால் இது ²நிந்தை உவமை² ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக