புதன், 24 ஏப்ரல், 2019

இறந்தகால விலக்கு!



இறந்தகால விலக்கு!
(அணி இலக்கணம் - முன்ன விலக்கணி)
.
பாடலில் இறந்த காலத்தில் நடந்தாகக் கூறிடும் ஒரு நிகழ்ச்சியை விலக்குவது இறந்தவினை விலக்கு எனப்படும்.
.
. ம்
உன்னைப் பிரிந்ததால் ஊண்உறக்கம் இல்லையென்றாய்
என்னுயிர் போனதே என்றழுதாய்! – பின்என்முன்
பேசுவது தேவதையோ பெண்ணோ அணங்கழகோ
வீசுதமிழ்ச் சொல்லால் விளம்பு!

பொருள் முன்னர் என்னைப் பிரிந்ததால் ஊண் உறக்கம் இல்லை என்றாய். என்னுயிர் போனதே என்று அழுதாய். நான் வந்த பின்பு என் எதிரில் வந்து நிற்கிறாய். அப்படியானால் என்முன் பேசுவது தெய்வமா ? பெண்ணா ? மோகினியா ? வீசும் தமிழ்சொற்களால் விளக்கிச் சொல்.
    பாடலில் இறந்த காலத்தில் தன் காதலி சொன்னது பொய் என்று விலக்குவதால் இது இந்த கால விலக்குஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.04.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக