திங்கள், 1 ஆகஸ்ட், 2022

மயூர வெண்பா!

 


.

அமுது கொடுக்கும் அழகும் அறிவும்  8
குமுத மலர்போல் குளிர்ந்து கமழ்ந்தும்  8
வரைந்து வகுக்கும் வளமை புரிந்தும்  7
விரைந்தறிவார் நம்மொழியுள் வீழ்ந்து!  10
.
பாவலர் அருணா செல்வம்
02.08.2022

 
(மற்ற அடிகளைவிட ஈற்றடி எழுத்துக்கள் மிக்கு வரவேண்டும். புள்ளியும், ஆய்தமும், குற்றுகரமும் நீக்கி எழுத்தெண்ண வேண்டும்.(குற்றுகரம் என்பது கு சு டு து பு று ஆகும்)


2 கருத்துகள்: