செவ்வாய், 15 செப்டம்பர், 2020

அழுகை !

 



 

அடித்தாலும் அழுகைவரும்! சொல்லும் வார்த்தை
    தடித்தாலும் அழுகைவரும்! பாசம் பொங்க
நடித்தாலும் அழுகைவரும்! தவற்றைக் காட்டி
    இடித்தாலும் அழுகைவரும்! மேனி நோயால்
துடித்தாலும் அழுகைவரும்! துன்பம் தாங்க
    முடியாமல் அழுகைவரும்! கதையில் மூழ்கிப்
படித்தாலும் அழுகைவரும்! கண்ணீர்ப் பொங்கி
   வடிக்கின்ற அழுகையாவும் விதியே செய்யும்!
.
பாவலர் அருணா செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக