செவ்வாய், 8 செப்டம்பர், 2020

வண்ண நிலவு!


எழுசீர் விருத்தம்..

.

வண்ணம் எதுவென வஞ்சி வியந்திட
         வட்ட வடிவினில் பூத்ததைக்
கண்கள் விரிந்திடக் கன்னம் சிவந்திடக்
         கட்டுக் களிப்புடன் நோக்கினாள்!
எண்ணம் விரும்பிய இன்பம் புரிந்ததை
        எட்டிப் பிடித்திடப் பார்த்திட
விண்ணில் வலம்வரும் விந்தை நிலவது
        விட்டு முகிலினுள் பாய்ந்ததே!
.
பாவலர் அருணா செல்வம்
09.09.2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக