ஞாயிறு, 15 நவம்பர், 2015

பாரீஸ் – குண்டு வெடிப்பு – தெரிந்த செய்திகள் !!


நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கடந்த வெள்ளிக்கிழமை 13ந்தேதி இரவு பிரான்சின் தலைநகர் பாரஸ் நகரத்தில் தீவிர வாதிகளால் ஐந்து இடங்களில் குண்டு வெடித்த சம்பவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருந்தாலும் இதைக் குறித்து பிரான்ஸ் தொலைக்காட்சியில் நான் அறிந்த செய்திகளைக் எழுதுகிறேன்.

    கடந்த 13 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு பிரான்ஸ் – ஜெர்மன் கால்பந்து ஆட்டம் நடைபெற்றது. அதை நானும் என் கணவரும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தோம். அந்த மேட்ச் பார்க்க பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா ஒலந்த் அவர்களும் வந்திருந்தார்.
    மாட்ச் முடிவதற்கு சில நிமிடங்கள் இருந்த போது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் குண்டு வெடித்த சப்தம் கேட்டது. அந்த சப்தத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அடுத்த சில நொடிகளிலேயே இன்னொரு குண்டு வெடிப்பு சத்தம். மக்கள் திடிரென்று குக்குரலுடன் கிரௌன்ட்க்குள் ஓடி வந்தார்கள். மாட்ச் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
   சற்று நேரத்தில் பிளாஷ் நியுசாக விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் குண்டு வெடித்துள்ளதாகவும் மக்கள் அனைவரும் அமைதியாக மைதானத்தில் வந்து இருக்குபடி சொன்னார்கள்.
   கொஞ்ச நேரம் என்ன ஏது என்று தெரியாமல் இருந்தது. பிறகு தான் பாரீ்ஸ் நகரின் ஐந்து இடங்களில் குண்டு வெடித்தது தெரிந்தது.
   அந்த இரவு நேரத்தில் குண்டு வைத்தவர்கள் யார் எதற்காக என்பதைப் பார்க்காமல் குண்டு வெடிப்பில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதை முக்கிய கடனாகச் செங்தார்கள்.
   இதன் பிறகு ஒரு சில மணி நேரத்தில் 1500 ஆர்மி படையினர் பாரீஸ் நகரத்தில் இரக்கப்பட்டார்கள்.
   இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் 129 அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டார்கள். 352 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கட்பட்டு உள்ளார்கள்.

யார் ? ஏன் ? எதனால் ? 

    இந்த அழிவுச்செயலைச் செய்தவர்கள் சிரி நாட்டு தீவிரவாதிகள் என்பது சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே தெரிந்து விட்டது. மொத்தம் 11 பேராக இருக்கலாம். இதில் எட்டு பேர் மனித வெடிகுண்டுகள். இந்த எட்டு பேரில் ஏழு பேர் ஐந்து இடங்களில் மனித வெடிகுண்டுகளாக வெடித்துச் சிதறிவிட்டார்கள். ஒருவனைப் போலிஸ் சுட்டு கொன்றுவிட்டது. மூன்று பேர் தப்பியோடி விட்டார்கள்.
   தப்பியோடிய மூன்று பேரும் பெல்ஜியம் நாட்டில் ஒளிந்திருப்பதாகச் செய்தி.
  
காரணம் என்ன ?

    சிரி நாட்டில் மதக்கலவரம் நடந்துக் கொண்டு இருக்கிறது. இதனால் பல அப்பாவி மக்கள் அவதிப்படுவதால் ரஷ்யாவும், பிரான்சும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது. இதைப் பிடிக்காத அந்நாட்டு தீவிரவாதிகள் முதலில் ரஷ்ய விமானத்தை தாக்கினார்கள். (கடந்த சில வாரத்தில் வானத்திலேயே ஒரு விமானம் வெடித்துச் சிதறிய செய்தி படித்திருப்பீர்கள்) அதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள்.
    இப்போது பிரான்ஸ் நாட்டைத் தாக்கியுள்ளார்கள்.
   இந்த குண்டுவெடிப்பில் உயிரிட்ட மனித வெடிகுண்டு ஒருவன் ஹல்லா உ ஹக்கபர் என்று கத்தியபடியும், மற்றொருவன் ஒலந்தின் செயல்களை மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள்‘ என்று கத்தியபடியும் வெடித்திருக்கிறான்.
   இவர்களின் குறி ப்ரான்ஸ்வா ஒலந்தைத் தாக்குவது தான். ஆனால் மைதானத்திற்குள் நுழைய பலத்த பாதுகாப்பு இருந்ததால் அந்த மனித வெடிகுண்டால் அரங்கத்திற்குள் நுழைய முடியவில்லை.

இப்போது என்ன நடக்கிறது ?

     சிரி நாட்டின் ஜனாதிபதி பஷார் எல் அஷாத், ‘எங்கள் விசயத்தில் தலையிடாதீர்கள். உங்கள் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்‘ என்று வாய்மொழி அறிக்கையாக வெளியிட்டதால் பிரான்ஸ் இன்று பத்துப் போர் விமானங்களைச் சிரி நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
    இந்த விமானங்கள் சிரி நாட்டில் ராக்கா என்ற இடத்தில் போட்ட 20 குண்டுகளில் சிரி நாட்டின் முக்கிய இராணுவ பயிற்சி கூடத்தைத் தகர்த்தியுள்ளது.
    இன்னும் அந்நாட்டில் என்ன என்ன தகர்த்தப்படுமோ….
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் ! 
இவை அனைத்தும் பிரான்ஸ் தொலைகாட்சி கண்டதை எழுதினேன்.

அருணா செல்வம்

15.11.2015    

22 கருத்துகள்:

  1. தகவலை மிக சுருக்கமாகவும் எளிமையாக பகிர்ந்தற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      போன பதிவில் தமிழ்இளங்கோ ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க எழுதினேன்.
      என்னையெல்லாம் கற்பனையில் எழுதச் சொன்னால்.... நிறைய எழுதுவேன்.
      உண்மையை எழுதுவது கடினம் அல்லவா.... அதனால் தான் சுறுக்கமாக...

      நீக்கு
  2. இந்தியர்கள் யாரும் இதில் பாதிப்பு அடைந்தார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த வரையில் இல்லை.

      பொதுவாக பிரான்ஸ் நாட்டினர், 13 ந்தேதி வெள்ளிக்கிழமையில் வந்தால் அந்த நாளை கெட்ட நாளாக நினைப்பவர்கள்.
      இந்த நினைப்பு நம்மவர்களுக்கும் தொத்திக்கொண்டது என்பது உண்மை.
      அதனால் அன்று வெளியில் அதிகம் பேர் இல்லை. தவிர குண்டு மைதானத்திற்கு வெளியில் தான் வெடித்தது.
      பாரீஸில் பட்டாக்குலன் என்ற இடத்தில் இசைக்கச்சேரி நடந்துக்கொண்டு இருந்ததால் அந்த இடத்தில் வெடித்த குண்டால் தான் அதிக உயிர் இழப்பு.

      நீக்கு
  3. வேதனையாக இருக்கிறது சகோதரியாரே
    அப்பாவிகளைக் கொன்றா, மிரட்டல் விடுவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பிரான்ஸ் அமைதியை விரும்பும் நாடு.

      சாது மிரண்டால்....
      நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. மனித வாழ்வு இத்தனை மலிவாய்ப் போனதோ..:(

    மனதைப் பிசைந்தன காட்சிகளும் செய்திகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலிவாகப் போகவில்லை சகோதரி.
      அதன் மதிப்பை அவர்கள் அறியவில்லை.

      நன்றி.

      நீக்கு
  5. அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் கோழைகளே!

    பதிலளிநீக்கு
  6. சகோதரி அவர்களின் பகிர்வுக்கு நன்றி. மதத்தின் பெயரால் பேயாட்டம் ஆடுபவர்களுக்கு அவர்கள் சொல்லும் கடவுள்தான் தீர்ப்பு வழங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதை இழந்து எதை பெற போகிறார்கள் என்பது தான் புரியவில்லை.

      இந்தப் பதிவை எழுதத் துர்ண்டியமைக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  7. உலகில் தீவிரவாதம் தலைதூக்கி ஆடுகின்றது. உயிர்கள் எதற்குமே மதிப்பு இல்லை என்றாகிவிட்டது. வேதனைதான்

    பதிலளிநீக்கு
  8. மதம் மறந்தால் மனிதம் தளைக்கும் கொடுமையான செயல்.

    பதிலளிநீக்கு
  9. என்று ஒழியும் இந்தத் தீவிர வாதம்?

    பதிலளிநீக்கு
  10. வருந்துகிறேன்! உங்களை தத்து எடுத்த நாட்டிற்கு ஏதாவது செய்யுங்கள்!

    பதிலளிநீக்கு
  11. வதம் செய்யப்பட வேண்டிய தீவிரவாதம்.....

    எனது ஆழ்ந்த அஞ்சலிகளும் இரங்கல்களும்....

    பதிலளிநீக்கு