புதன், 11 நவம்பர், 2015

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் !!


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை,
‘சப்தமிட்டு நடக்காதீர்கள்
இங்கே தான் என் அம்மா
இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்‘

உலகப் பேரழகி கிளியோ பாட்ராவின் கல்லறை வாசகம்,

உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல வேலையாக பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருந்திருக்கும்‘

மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்,

‘இந்த உலகம் முழுவதுமே போதாது
என்று சொன்னவனுக்கு
இந்த கல்லறைக் குழி
போதுமானதாக இருந்தது‘

ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம்,

‘இங்கும் புதை குழியில் கூட
இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்‘

ஓர் அரசியல்வாதியின் கல்லறையின் மீது எழுதப்பட்ட வாசகம்,

‘தயவு செய்து இங்கே
கை தட்டி விடாதீர்கள்,
இவன் எழுந்துவிடப் போகிறான்‘

ஒரு விபச்சாரியின் கல்லறை வாசகம் இது,

‘இங்கு தான் இவள் தனியாக தூங்குகிறாள்‘

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

10 கருத்துகள்:

  1. கல்லறை வரை தொடரும் வாழ்க்கை..
    ஒருவன் என்னவாக வாழ்ந்தானோ அப்படியே அமைகிறது கல்லறையும் ...நல்ல தொகுப்பு

    பதிலளிநீக்கு
  2. நானும் படித்து இருக்கிறேன்! சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமையான தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  4. இங்குதான் இவள் தனியாகத் தூங்குகிறாள் ''

    எவ்வளவு வலிமிகுந்த வரிகள் அருமையான ஆழமான கருத்துள்ள வாசகங்கள் ....ம்ம்ம்ம் நாம என்று எழுதலாம் இப்போதே சொல்லிடுவோம் ஏனெனில் இறப்பு சொல்லிவருவதில்லையே !

    பகிர்வுக்கு நன்றி வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  5. சுருக்கமான ஆயினும்
    வலிமையான வாசகங்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமை...
    கடைசி சோகமே ஆயினும் எதார்த்தம்...

    பதிலளிநீக்கு