வெள்ளி, 22 ஜூன், 2012

கற்பனை!! (கவிதை)




 கற்பனைக் குதிரைக்(கு)
    எத்தனை கால்கள்
       எண்ணிக் காட்டுங்கள்!
சொற்களில் வடிக்க
    எத்தனை நிறங்கள்?
        சுவையாய்த் தீட்டுங்கள்!
கற்பனை எல்லாம்
    கருநிறக் கண்ணன்
        வேலை என்பதனால்
சொற்களில் வைத்து
    விளையாடும் கவியும்
       காதல் கண்ணன்தான்!


13 கருத்துகள்:

  1. கற்பனைக் குதிரைக்(கு)
    எத்தனை கால்கள்
    அற்புதக் கேள்விக்கு
    அறிந்திடா! விடைகள்!
    நற்பதம் கொண்டே
    நவின்ற பாடல்
    கற்பவைக் கற்றவர்
    கவிதையில் ஆடலாம்

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க புலவர் ஐயா.

      நீக்கு
  2. சொற்களை வைத்து விளையாடும் கவியும்
    நிச்சயம் கண்ணன்தான்
    அருமையான வரிகள்
    அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  3. கண்ணனை நினைக்காத நாள் இல்லையே பாடல் நினைவுக்கு வருகிறது சகோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிங்களா...?
      எனக்கும் பழையப் பாடல்கள் ரொம்ப பிடிக்கும் சசிகலா.

      நன்றிங்க சகோதரி.

      நீக்கு
  4. அட இப்ப இப்படியெல்லாம் கவித எழுதுரீங்களா....:)

    சூப்பர் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி....

      இப்ப மட்டும் இல்லைங்க...
      எப்பப்பார்த்தாலும் எதையாவது எழுதுவதே
      என் பழக்கம்ங்க.
      என்ன முதலில் எல்லாம் எழுதினால் நானும் என் ஆசிரியரும் மிஞ்சி போனால் மூன்று நண்பர்கள் படிப்பார்கள்.
      இப்பொழுது வலையில் போடுவதால் நிறைய பேர்கள் படிக்கிறார்கள் என்பதால் அதிகமாக எழுதத் துாண்டுகிறது.
      அதிலும் உங்களைப் போன்ற நண்பர்கள் கருத்துரை இட்டதும் மேலும் எனக்கு உற்சாகமாக ஆகிவிடுகிறது.....

      நன்றிங்க சிட்டுக்குருவி.

      (நாளை “சிட்டுக்குருவி” பாட்டு போடுவேன்)

      நீக்கு
  5. எனக்குப் பிடித்தது கண்ணனும் விநாயகரும்தான். கவிதையும் கண்ணன்தான் என்று சொன்னது கன்னல் போல இனிக்கிறது. அருமைப்பா.

    பதிலளிநீக்கு