வணக்கம் நண்பர்களே!!
நான் போன வாரம்
“வணங்க வேண்டும்“ என்ற தலைப்பில் நான்கு பதிவுகள் இட்டிருந்தேன்.
அதில் ஒரு பதிவில்
ஒரு நண்பர் “மனிதனை வணங்காமல் படைத்தவனை வணங்கினால் நன்று“ என்றும் “வணங்க
வேண்டும் என்பதைப் போற்ற வேண்டும் எனலாமே...” என்றும்
பின்னோட்டமிட்டிருந்தார்.
நானும் அதைப் பெரிதாக கொள்ளாமல்
“உங்கள் கருத்திற்கு நன்றி“ என்று மட்டும் பதிலெழுதினேன். ஆனால்.... இதைப்படித்த
வேறு ஒரு நண்பர் “ இந்தக் கருத்திற்கு நீங்கள் சரியான விளக்கம் கொடுத்திருக்க
வேண்டும்.“ என்று மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.
நானும் “சரி ஐயா... விளக்கம் தருகிறேன்“ என்று பதிலெழுதிவிட்டு அதற்கான பதிலை
அனைவருக்கும் பகிர்கிறேன்.
பொதுவாக “வணங்குதல்“ வேண்டுதல்“ போற்றுதல்“ “தொழுவுதல்“ போன்ற சொற்கள்
அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே பொருளைத் தான் கொடுக்கும். ஆனால் அதிலும் சின்ன சின்ன
வேறுபாடுகள் உள்ளன.
“வணங்குதல்“
நாம் மனத்தால் உயர்வாக மதிக்கும் அனைத்தையும் வணங்குவதை “வணங்குதல்” எனலாம். உதாரணமாக தாய்,
தந்தை. தமிழ், குரு, தெய்வம், தலைவர்கள்..... இப்படி..
இப்படி வணங்குவதற்கு வயது வரம்பு கிடையாது.
“வேண்டுதல்“
வேண்டுதல் என்பது நமக்குத் தேவையானதை அது இருக்கும் ஒருவரிடம் வேண்டிப்
பெறுவது.
உதாரணடாக ஆண்டவனிடம் அருளை வேண்டி பெறுதல், ஆசிரியரிடம் கல்வியை வேண்டி
பெறுதல்... இப்படி சொல்லிக்கோண்டே போகலாம்.
ஆனால் பெற்றோர்கள் அன்புருவானவர்கள். அவர்களிடம் அன்பை வேண்டி பெறுதல் என்றோ வேறு
எதையோ வேண்டி பெறுதல் என்றோ சொல்லக்கூடாது.
“போற்றுதல்“
போற்றுதல் என்பது உயர்ந்தவர்களின் புகழை, அவர்களின் செயற்கரியச் செயலை
உயர்த்தி பேசுவது, உயர்த்தி பாடுவது எனலாம்.
“தொழுவது”
தொழுவது என்பது நம்
முன்னோர்கள் ஆண்டவனை முறைப்படி எப்படி வணங்குவது என்று சொல்லி வைத்தார்களோ அந்த
முறைப்படி ஆண்டவனை வணங்குவது ”தொழுதல்“ என்பதாகும்.
உதாரணமாக
கிருஸ்த்தவர்கள் முட்டிப்போட்டுக்கொண்டு தேவனைத் தொழுவது, இஸ்லாமியர் ஒரு திசையைப்
பார்த்து நமஸ் ஓதி அவர்களின் இறைவனை வணங்குவது, இந்துக்கள் ஆண்டவனை இத்தனை வளம்வந்து
வணங்குவது... இப்படி முன்னோர் சொன்னதைக் கடைபிடித்து ஆண்டவனை வணங்குவதாகும்.
நாம் நம்மைவிட உயர்ந்தவர்களை வணங்குவது
அவர்களுக்கு நாம் காட்டும் பணிவின் அடையாளமே...
(என்ன...
இதுக்கெல்லாம் ஒரு பதிவா என்று என்னை யாரும் திட்டாதீங்க நண்பர்களே...)
நன்றி.