திங்கள், 10 ஜூன், 2019

விபாவனை அணி!



வினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்!

இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வின் உலகறிந்த பொருளைக் கூறாமல் அவ்வினை அந்தப் பொருளுக்கானது அல்ல என்று இவ்வினையை மறுத்து அதற்கு எதிரான வேறு ஒரு நிகழ்வைக் கூறுவதுவினை எதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்எனப்படும்.

. ம்
தேயாத வெண்ணிலவில் தேர்ந்த இருளான
வேயாத கூறை விரிந்திடப்பாயாத
கூர்வேலால் தாக்கக் கொடியில்லாப் பூவிதழாள்
சேர்க்காமல் சென்றதேன் செப்பு!

பொருள்தேயாத வெண்ணிலவில் (பெண்ணின் முகம்) மிகவும் அடர்ந்த இருளான வேயாத கூறை விரிந்திட (தலையில் உள்ள கற்றைக் குழல் விரிந்திட), பாயாத கூர்வேல் தாக்க (கண்கள் தாக்க) கொடியில்லா பூவிதழாள் (செவ்விதழ்வாய்) தன்னைச் சேர்த்து அணைக்காமல் சென்றது ஏன் ? இது தலைவனின் கூற்று இயல்பாக வந்துள்ளது.
    தேய்ந்து வளரும் தன்மையுள்ளது வெண்ணிலவு. இங்கே தேயாத நிலவு என்றதால் இது அந்த மங்கையின் முகத்தைக் குறிக்கிறது. குடிசைகளில் கீற்றோலையால் அடுக்கப்படுவது. இங்கே வேயாத கூறை என்றதால் இது அவளின் தலை முடியைக் குறிக்கிறது. வேல் பாய்ந்து தாக்கும். இங்கே பாயாத கூர் வேல் என்றதால் இது அவளின் கண்களைக் குறிக்கிறது. பூக்கள் கொடியில் பூக்கும். இங்கே கொடியில்லாப் பூ இதழ் என்பதால் இது அவளின் வாயைக் குறிக்கிறது.
   தேய்ந்து வளருதற்கு வெண்ணிலவும், குடிசைக்குக் கீற்று வெய்யப்படுவதும், வேல் பாய்வதும், பூக்கள் கொடியில் இருப்பதும் அதன் அதன் வினைகள். இவ்வினைகளை மறுத்து, முகம், தலைமுடி, கண்கள், வாய் என்று பி பொருட்கள் புலப்படுத்துவதாக வந்துள்ளதால் இதுவினையெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தல்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
10.06.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக