செவ்வாய், 20 ஜூன், 2023

மெலி அகவல் ஏந்திசை வண்ணம் !



 
எண்ணமென்ற கண் !
.
தன்ன தந்த தன்ன தந்த
தன்ன தந்த தந்தானா! (ஒரு கலைக்கு)
.
அன்னை யென்று முன்னை யொன்றி
   அன்மை யன்றி நின்றேனே!
அன்ன மென்ற வெண்மை கண்டு
    மண்ண லென்ற றிந்தேனே !
 
இன்ன லென்று யின்மை யென்று
    மெண்ணி நின்ற யர்ந்தேனே!
எண்ண மென்ற கண்ணி ருந்து
    மிங்ங னம்ப யந்தேனே !
 
மன்ன னுன்றன் மின்னி டும்பொன்
    மண்ணி னின்ற செவ்வேலால்
வன்மை யின்ப யம்மி ரண்டு
    வன்ந கர்ந்து டன்வாழ்வேன் !
 
என்ன வென்று கண்ணி லென்று
   மெண்ணி யுன்ப தங்காண்பேன் !
எண்ண மென்ற உன்னு யர்ந்த
   இம்மை யின்ப முண்பேனோ !
.
பாவலர் அருணா செல்வம்
20.06.2023

 
அன்மை - தீமை
அண்ணல் - கடவுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக