செவ்வாய், 17 நவம்பர், 2020

ஊழியி னொளியாய் வருவாயே!



தானன தனனா தானன தனனா
தானன தனனா தனதானா !  (அரையடிக்கு)
 .
மாரியி னருளே! மாமணி நிழலே!
….மார்கழி எழிலே யதனோடே
..மாதவ முனியே சீரிய உயர்வே
……..மாந்தரின் நினைவாய் நிறைந்தோனே!
.
வீரிய முதிர்வாய் வாடிய உயிரோ
…….வேதனை படுதே பெருநோயால்!
..வீதலி லழுதோர் வீரிடுங் குரலோ
……..வேசடை வலியோ கடல்போலே!
.
ஊரினி லுழல்வோர் வேறுயிர் மறந்தே
…….ஓதிய பொருளாய் யுறைவோனே
..ஊடுறு வினையோ ஓடிய ழியவே
……ஊழியி னொளியாய் வருவாயே!
.
சேரிட முணர்ந்தே சேனையை யறிந்தே
…….சேவடி யுனதே பணிந்தோமே!
..சீயெனும் பிணியோ மாயென மறைந்தே
…….சீவனு யரவே அருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
18.11.2020

 
வேசடை – துக்கம் கவலை
வீதல் – சாதல், கெடுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக