செவ்வாய், 14 ஜனவரி, 2020

தமிழர் புத்தாண்டு வாழ்த்து!



.
புத்தாடைக் கட்டிக் கொண்டு
   பூச்சூடிப் பின்னிக் கொண்டு
சத்தான அரிசி கொண்டு
   சருக்கரையில் பொங்கல் செய்து
கொத்தான மஞ்சள் கட்டிக்
   கோலமிட்ட இடத்தில் வைத்துக்
கத்தைசெங் கரும்பைச் சேர்த்துக்
   காலமதை வணங்கு வோமே!

மொத்தத்தில் தமிழர்க் கென்றும்
   முழுதான சொந்தம் என்றும்
சித்தத்தில் விளக்காய் ஏற்றிச்
   சிறப்பாக ஒளிரச் செய்வோம்!
புத்தாண்டு திருநாள் என்றும்
   புதிதாகப் பிறக்கும் தையே !
முத்தான இந்த நாளை
   முடிவாக்கிப் பொங்கு வோமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக