வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ஆண்கள் அழகாக எளிய ஏழு வழிகள் !





1. ஆண்களுக்கு முழங்கை மூட்டுகள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச்சாறு, தயிர், தேன், கடலைமாவு ஆகிய நான்கையும் கலந்து குழைத்து, வாரம் இரண்டு முறை கைகள் முழுவதிலும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுகள் மறையும்.

2. கற்றாழை, உடல் குளிர்ச்சிக்கும் தோல் பொலிவுக்கும் நல்லது. வெயில் காலங்களில் கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்துக் கை, கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவியப் பிறகு வெளியே போனால் சூரியக் கதிர்களில் இருந்து கை கால்களைப் பாதுகாக்க முடியும்.

3. முகம் பொலிவு அடைய அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபில் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றைக் கலந்து முகத்துக்குப் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வெண்டும். அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இந்தக் கலவையைக் கை, கால்களிலும் போட்டுக் கொள்ளலாம்.

4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும், பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜீஸ், வெள்ளரி ஜீஸ், ஆரஞ்சு ஜீஸ், எலுமிச்சை ஜீஸ், ஸ்டாபெர்ரி ஜீஸ் அருந்தலாம்.

5. ரோஜா இதழ்களைச் சேகரித்து, அதை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும். உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

6. சூடான உடல் வாகு கொண்டவர்கள், தினமும் குளித்தவுடன் புதினா இலைகளைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறியதும் அந்த தண்ணீரை ஒரு பருத்தித் துணியில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். அது உடலில் உள்ள வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

7. முகத்தில் உள்ள கருப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.


பெண்களுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் இயற்கையிலேயே அழகு என்பதால்.

நட்புடன் 
அருணா செல்வம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக