வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

வெண்ணைப் புட்டு செய்முறை!



தேவையான பொருட்கள்

பச்சரிசி -  2 டம்ளர்
சர்க்கரை - 2 டம்ளர்
தேங்காய் - 1
முந்திரி பயிர் - கொஞ்சம்
ஏலக்காய் - 10

செய்முறை


அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.




தேங்காயைத் துறுவி வைத்துக்கொள்ள வேண்டும். ( சிலர் பாலாகவும் பிழிந்து கொள்வார்கள்) முந்திரியை உடைத்துக்கொள்ள வேண்டும். (சிலர் முந்திரிக்குப் பதில் கடலை பயிர் சேர்ப்பார்கள்) ஏலக்காயை நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.



அடுத்து அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எட்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். கொதித்ததும் உடைத்த முந்திரி பருப்புகளைக் கொட்டி பாதி வேக விடவும்.



பிறகு தீயை மிகவும் சின்னதாக்கி.... அரைத்த மாவை மெதுவாகவும் அதே சமயம் தண்ணீரைக் கிளறிக்கொண்டே ஊற்ற வேண்டும். சீக்கிரத்தில் அடி பிடித்துவிடும்.  அதனால் சற்று வேகமாகக் கிளறிக்கொண்டே மாவை ஊற்ற வேண்டும்.



மாவை அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே நன்றாக வேகவிடவேண்டும்.


வெந்தமாவில் சர்க்கரை, நசுக்கிய ஏலக்காய் சேர்த்து கிளறி... மேலும்



துறுவிய தேங்காய் சேர்த்து கிளறி நன்கு வேகவிடவேண்டும். 



 மாவு வாசனை போனதும் மாவு நன்கு கெட்டிப் பட்டு வந்ததும் இறக்கி, சின்னச் சின்ன கிண்ணங்களில் ஊற்றி ஆற விட வேண்டும்.



வெண்ணைப் புட்டு

சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்
12.02.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக