புதன், 5 செப்டம்பர், 2012

மோகத் தீயை மூட்டாதே..!! (கவிதை)





கண்ணே மணியே!
   கன்னல் அமுதே! கவிமலரே!
பெண்ணே உன்றன்
   பேற்றை எண்ணி வியக்கின்றேன்!
முன்னே நின்று
   மோகத் தீயை மூட்டாதே!
பின்னே வந்து
   பித்தை என்னுள் பிணைக்காதே!


அருணா செல்வம்.

16 கருத்துகள்:

  1. கூறிய வாளோ அவளின் கயல் விழி ஆறா விழுப்புண்னை ஏற்படுத்துகிறது என் நெஞ்சில்!
    -என்று எங்கோ என்றோ படித்த கவிதை ஞாபகத்திற்கு வருகிறது புகைப்படத்தில் இருப்பவரின் கண்களை பார்க்கும் போது!

    கவிதையை பொறுத்த வரையில் எட்டு வரிகளில்... ஒரு காதல் பிதற்றல்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காதல் பிதற்றல்! :) --- ஆமாங்க வரலாற்று சுவடுகள்.
      நன்றி.

      நீக்கு
  2. நல்லா சொல்லியிருக்கிறீங்க...

    பதிலளிநீக்கு
  3. அத்தனைப் பித்தம் ஏறிவிட்டதா? முன்னும் பின்னும் வந்து பாடாய்ப் படுத்தாதே என்று அவளைப் பார்த்து இறைஞ்சவைக்கிறதே... காதலோடு தாபம் சொட்டும் கவிதை. பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு

  4. பேறு என்னவென்று சொல்லவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...

      பேரு ”பேயம்மாள்” ன்னு காதுல விழுந்ததுல ஒரு பதிவே இட்டேன்.
      ஆனால் இன்னும் உண்மையான பெயர் தெரியாது. அதைவிட கடந்த மூன்று வாரமாக அந்த பேய.... காணவில்லை.

      நன்றி ஐயா.

      நீக்கு
  5. காதலோடு தாபம் சொட்டும் கவிதை. பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
  6. மோகத்தீயை மூட்டாதே என்று சிறப்பான கவிதை மோகம் ஏற்படுத்தி விட்டீர்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

    பதிலளிநீக்கு
  7. கவிதையே சுடுது....காதல் வெப்பம் !

    பதிலளிநீக்கு