செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாரதி பாட்டு !! (கவிதை)





பாடும் பாட்டிலே பாவலர் மனத்தினைப்
    படித்திடும் தமிழ்ப்பாட்டு!
தேடும் ஏட்டிலே தெளிவுடன் கருத்தினைத்
    தீட்டிய தேனூற்று!
கூடும் கூட்டிலே குருவிகள் இன்பமாய்க்
    கூவிடும் இசைகேட்டு!
ஓடும் வெள்ளமாய் உயர்தமிழ் பாய்ந்திட
    உலகெலாம் தமிழ்சாற்று!


அருணா செல்வம்.

22 கருத்துகள்:

  1. நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மகாகவியின் நினைவு தின
    சிறப்புக் கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரமணி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உங்களின் பதிவுகளைப் படித்துவிட்டேன்.
      என் பாடலைப் பாராட்டியமைக்கும்
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  4. அருமையான மகாகவியின் நினைவு கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. பாரதி நினைவு நாளினில்
    பாடிய தமிழ்ப் பாட்டு
    வீரினை அளிக்கும் விருந்தாய்
    விளங்கிடும் தமிழ்ப் பாட்டு
    பாரீசு வாழும் அருணா நீயே
    வாரீசு பாரதிக்கு
    வாழ்க நீ வளர்க உன் கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்ரமணியன் முனிசாமி ஐயா.

      தங்களின் முதல் வருகைக்கும்
      அழகிய வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  6. வாழ்க பாரதி புகழ்.
    வளர்க நின் தமிழ்

    பதிலளிநீக்கு
  7. \\ஓடும் வெள்ளமாய் உயர்தமிழ் பாய்ந்திட உலகெலாம் தமிழ்சாற்று.\\

    சாற்றுவோம், போற்றுவோம் தன்னிகரில்லாத் தண்டமிழை. அழகுத் தமிழ்போற்றும் கவிதைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் அழகிய பாராட்டும்
      என்னை மேலும் உற்சாகப் படுத்துகிறது.
      நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு

  8. பாரதியை நினைவு கூர்ந்தால் மட்டும் போதுமா..அவன் உணர்வுகளோடு ஒன்ற வேண்டாமா. இனி ஒரு விதி செய்வோம். அவன் சொல்படி நடப்போம். !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக ஐயா....
      (திரும்பவும் நமக்கு உண்மையான சுதந்திரம் வேண்டுமென்று கேட்போம்....)

      நன்றி ஐயா.

      நீக்கு