திட்டம் போட்டே செய்திட்டாள்.
திறமை யானக் கைகாரி!
சட்டம் என்றே ஒன்றிருந்தால்
சரியாய்ப் பிடித்து வைத்திடுவேன்!
எதிரி எவனும் இருந்ததில்லை.
எதிர்த்தே எவனும் நின்றதில்லை.
கதிரு போன்ற பெண்ணவளோ
கடுதில் நுழைந்த மாயமென்ன?
அஸ்தி வாரம் பலமான
அமைத்து வளர்ந்த தேகமிது!
பஸ்கி குஸ்தி செய்துநன்றாய்ப்
பருவம் மயக்கும் பளிங்கானது!
நாட்டுக் கோழி நல்லெண்ணெய்
நாளும் உண்டு வளர்த்தவுடல்!
தீட்டும் தமிழை இதயமேந்தித்
திளைத்தச் சுவையால் களித்தவுடல்!
தெள்ளத் தெளிந்தே நானிருந்தேன்!
தெரிந்தே திமிராய் எதிர்வந்தாள்!
கள்ளச் சாவி இல்லாமல்
கண்ணின் வழியில் புகுந்துவிட்டாள்!
கருத்தில் சேர்த்த நான்மறைகள்
கவிக்கே பயின்ற இலக்கணங்கள்
இருட்டில் கலந்த புகைபோல
இருந்த இடமோ தெரியவில்லை!
எதையோ எடுத்துச் சென்றுவிட்டாள்
இதயம் ஏங்கித் தவிக்கிறது!
இதைதான் காணோம் என்றில்லை
இருந்த அனைத்தும் காணவில்லை!
பசிக்க வில்லை! வாழ்க்கையும்
ருசிக்க வில்லை! காட்சிகளை
ரசிக்க வில்லை! கவிதைகளோ
கசிய வில்லை! கலங்குகிறேன்!
திருடிச் சென்ற அவளைநான்
தேடித் தேடிப் பார்க்கின்றேன்!
திருட்டுக் குட்டி என்கையில்
திரும்ப கிடைத்தால்... திருவிழாதான்!




