திங்கள், 24 ஜூன், 2019

ஐயவதிசயம்!



அதிசயவணி!

பாடலில் ஒரு பொருளை உலக நடையைக் கடந்து ஐயத்துடன் அதிசயத்துப் பாடுவதுஐய அதிசயம்ஆகும்.

உ ம்
செந்தமிழைத் தேவியவள் செப்பிடும் போதெல்லாம்
செந்தேன் குடித்த செயலானேன்! – முந்தும்
கவிதான் இனிப்போ! கருத்தைச் சுவைக்கும்
செவிகளுக்கும் வாயுண்டோ செப்பு!

பொருள்செம்மையான தமிழ் மொழியில் பெண்ணானவள் பேசிடும் பொழுதெல்லாம் நான் தேனைக்குடித்ததைப் போல் மயங்கினேன். இப்படி ஆவதற்கு காரணம் முந்திவந்து காதுக்குள் நுழையும் கவிதையில் உள்ள இனிப்பான சுவையோ. அப்படியென்றால் அந்தக் கவிதையில் உள்ள கருத்தின் சுவையை உண்பதற்கு செவிகளுக்கு வாய்தான் உண்டோ…. சொல்வாயாக.
   இப்பாடலில் கூறப்பட்ட பொருள் தமிழின் சுவை ஆகும். தமிழைக் காதால் கேட்டதும் மனமானது தேன் குடித்த நிலையை உணர்கிறது. அதற்கு காரணம் கவிதையில் உள்ள இனிப்பான சுவையோ. அப்படியானால் காதுகளுக்கு இனிப்பைச் சுவைக்க வாய் இருக்கிறதா ? என்று உலகநடையைக் கடந்து  ஐயமுடன் அதிசயத்துக் கூறியுள்ளதால் இதுஐயவதிசயம்ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
25.06.2019

2 கருத்துகள்: