வியாழன், 23 மே, 2013

இதுவும் அன்புதான்!! (நிமிடக்கதை)





     புனிதா தன் தாய்வீட்டினுள் நுழைந்ததும் அவள் தங்கை சாதனா, “வாக்கா.... என்ன நீ மட்டும் வந்திருக்க? மாமா எங்க?“ கேட்டாள்.
    “அவர் வரலடி. நான் மட்டும் தான் வந்தேன். பிள்ளைகளுக்கு எக்ஸாம் டைம் இல்லையா...? அவரைப் பாத்துக்கச் சொல்லிட்டு நா மட்டும் கிளம்பி வந்துட்டேன்“ என்றாள்.
    “உண்மையாவா...? உன்னை விட்டு மாமா பிரிஞ்சி இருக்க மாட்டாரே... எப்படி...? என்னால நம்பவே முடியலைக்கா“ என்றாள் சாதனா. புனிதா புன்முறுவலுடன் பேசாமல் இருந்தாள்.
    சாதனாவே ஆச்சர்யம் தாங்காமல் தொடர்ந்தாள். “எனக்குத் தெரிஞ்சி நீ கல்யாணம் செய்து போன இந்த இருவது வருஷமா ஒரு முறை கூட மாமாவ விட்டுட்டு வந்ததில்லை. அம்மா சாவுக்குக் கூட உடனே வராம வேலைக்கு போன மாமா வரும்வரைக்கும் காத்திருந்து கடைசி நேரத்துல தான் வந்தே. அந்த அளவுக்கு உன்னைப் பொத்திப் பொத்தி வச்சிருப்பாரு. அவர் போய் உன்னைத் தனியே மும்பாயிலிருந்து அனுப்பினார் என்றால் என்னால் நம்பவே முடியலைக்கா“ என்றாள்.
   “நம்பி தான்டி ஆகனும். எனக்கும் வயசாவுது இல்லையா...? அவர் கூட வந்தால் அவரைக் கவனிக்கவே எனக்கு சரியா இருக்கும். உங்க கூட கொஞ்ச நேரம் கூட தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்காத படி கூடவே இருப்பார். நீயே பல முறை இதைச் சொல்லி என்னைக் கிண்டல் பண்ணி இருக்கிற. அதனால தான் நான் விடாப்பிடியா நானும் வர்ரேன்னு சொன்னவரை வரவேண்டாம்ன்னு சொல்லி வருப்புறுத்தி விட்டுட்டு வந்தேன்“ என்றாள் புனிதா.
   “நீ செஞ்சது ரொம்ப தப்புக்கா. மாமாவுக்கு உன் மேல அவ்வளவு பிரியம். அதனால் தான் அவர் உன்னை எங்கேயும் தனியா அனுப்பாமல்... எங்கேயாவது போகனும்ன்னா அவரும் உன் கூடவே வந்து எப்பொதும் உன் கூடவே இருக்கிறது... இதையெல்லாம் பாக்குறப்போ நான் உன்னைக் கிண்டல் பண்ணினாலும் மாமாவ நினைச்சி ரொம்ப பெருமை பட்டு என்னவர்கிட்டே பேசுவேன் தெரியுமா...? புள்ளைங்களுக்கு உன் மாமியார் தொணைக்கு இருக்கிறாங்க தானே...? பின்னே எதுக்காக நீ அவரை விட்டுட்டு வந்தே?“
   பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே... சொந்தங்கள் வர ஆரம்பிக்க தன் அம்மாவின் திவச காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். வந்தவர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு புன்முறுவலுடன் ஒதுங்கினாள் புனிதா.

    அனைத்தும் முடிந்து மும்பாய்க்குக் கிளம்பும் பொழுது அவளின் கையைப்பிடித்து அப்பா கேட்டார். “புனிதா... உண்மையைச் சொல்லுமா... உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது சண்டையா...?“ என்று.
   அவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் சொன்னாள் “அப்படியெல்லாம் எதுவும் சண்டை இல்லைப்பா. என் கணவரைப் பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே... எதுக்கெடுத்தாலும் புனிதா... புனிதான்னு என்னையே சுத்தி சுத்தி வருவார். தனியாக விட்டு பழக்கமில்லை. எதையுமே தனியா முடிவெடுத்துச் செய்ய மாட்டார். எதுக்கெடுத்தாலும் நான் வேண்டும். இப்படியே போனால் நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்னுன்னா உயிரையே விட்டுடுவார். அந்த மாதிரி இருக்கிறதும் சரியில்லைப்பா. அவரைக் கொஞ்சம் தனியா விட்டு பழகனும். அதனால தான் நான் தனியா வந்தேன்.. மற்றபடி சண்டை சச்சரவு எதுவும் இல்லைப்பா.“ என்றாள் புனிதா.
    மகள் சொன்னதை யோசித்தார். அவள் சொல்வதும் உண்மைதான். தான் இருக்கும் வரையில் இன்பத்தைக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியாவது போங்கள் என்று நினைத்திடாமல்... தான் இல்லாமல் போனாலும் அதைச் சகித்துக் கொண்டு வாழ கற்றுக் கொடுப்பதும் ஒரு வகையில் அன்புதான்... புரிந்ததும் மகளைத் தட்டிக்கொடுத்து விட்டு இரயில் ஏற்றி அனுப்பினார்.

அருணா செல்வம்.
24.05.2013

41 கருத்துகள்:

  1. நல்ல கதை, நல்ல தம்பதிகளுக்கு புனிதா தம்பதி எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  2. //“நீ செஞ்சது ரொம்ப தப்புக்கா. மாமாவுக்கு உன் மேல அவ்வளவு பிரியம். அதனால் தான் அவர் உன்னை எங்கேயும் தனியா அனுப்பாமல்... எங்கேயாவது போகனும்ன்னா அவரும் உன் கூடவே வந்து எப்பொதும் உன் கூடவே இருக்கிறது... இதையெல்லாம் பாக்குறப்போ நான் உன்னைக் கிண்டல் பண்ணினாலும் மாமாவ நினைச்சி ரொம்ப பெருமை பட்டு என்னவர்கிட்டே பேசுவேன் தெரியுமா...?//

    எவ்வளவோ ஆண்கள் இதுபோலத்தான் மிகுந்த அன்புடன் இருக்கிறார்கள்.

    நல்லதொரு பதிவு. . ;)))))

    //“அப்படியெல்லாம் எதுவும் சண்டை இல்லைப்பா. என் கணவரைப் பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே... எதுக்கெடுத்தாலும் புனிதா... புனிதான்னு என்னையே சுத்தி சுத்தி வருவார். தனியாக விட்டு பழக்கமில்லை. எதையுமே தனியா முடிவெடுத்துச் செய்ய மாட்டார். எதுக்கெடுத்தாலும் நான் வேண்டும். இப்படியே போனால் நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்னுன்னா உயிரையே விட்டுடுவார். அந்த மாதிரி இருக்கிறதும் சரியில்லைப்பா. அவரைக் கொஞ்சம் தனியா விட்டு பழகனும். அதனால தான் நான் தனியா வந்தேன்.. //

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகான கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  3. இருக்கும் வரையில் இன்பத்தைக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியாவது போங்கள் என்று நினைத்திடாமல்... தான் இல்லாமல் போனாலும் அதைச் சகித்துக் கொண்டு வாழ கற்றுக் கொடுப்பதும் ஒரு வகையில் அன்புதான்...

    வாழ்வியல் நுட்பத்தை அழகுபட மொழிந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாட்களாக வலை பக்கம் காண்பதில்லை.
      நலமாக இருக்கிறீர்களா...?

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  4. அருமையான கதை! அருமையான மனைவி! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. இதயம் வருடும் கதை, பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  6. மிகவும் அருமையான கதை. தான் விதவையாகி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை ,தன கணவனின் இறுதிக் காலம் வரை தானே தன் கணவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இப்பொழுது அதிகம். புனிதாவும் அப்படியே. தனக்குப் பின்னும் கணவர் துன்பப்பட கூடாது என்று நினைப்பதும் அன்பு தான் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள்.
    பெண்களின் மனநிலையை அழகாக எடுத்துரைக்கும் கதையை பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து
      அதைக் கருத்தாகக் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி அம்மா.

      நீக்கு
  7. குடும்பம்ன்னா இப்படித்தான் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு வாழனும்...



    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவிதை வீதி.

      நீக்கு
  8. சாவு எப்ப வேணுமின்னாலும் வருமுங்க அப்படிப் பார்த்தா இந்தம்மா கல்யாணம் ஆனா நாளில் இருந்தே இந்த டிரெயினிங்கை ஆரம்பிச்சிருக்கலாம்............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயதேவ் ஐயா.

      உங்களின் கூற்றுபடி பார்த்தால் சாவு எப்ப வேணும்ன்னாலும் வரும் தானே... பிறகு எதற்கு கல்யாணம் எல்லாம் செய்துக்கொள்ளனும்...? பேசாமல் இன்னைக்கே ஒரு குழியைத் தோண்டி இப்பவே படுத்துக் கொள்ளலாமே... என்று யோசிக்க வைக்கிறது.
      பிறக்கிறவர் அனைவருமே ஒரு நாள் சாகத்தான் போகிறார்கள். அந்த ஒரு நாள் எது என்பது தெரிந்து விட்டால் வாழும் வாழ்வின் அர்த்தமோ சுவாரசியமோ இல்லாமல் போய்விடும் என்பதை அறியாதவர் அல்லவா தாங்கள்...!

      இருந்தாலும் யோச்சிக்கத் துர்ண்டிய வகையில் பின்னோட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. பி தான் இல்லாமல் போனாலும் அதைச் சகித்துக் கொண்டு வாழ கற்றுக் கொடுப்பதும் ஒரு வகையில் அன்புதான்...

    அருமையான கண்ணோட்டம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  10. இதுபோன்ற ப்ராக்டிக்கலாக யோசித்து முடிவெடுக்கும் பெண்களைக் காண்பது அரிது... நல்ல கதை... நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிது என்றா சொல்கிறீர்கள்...?
      எனக்குத் தெரிந்து இப்படிப்பட்டக் கணவர் அமைந்த பெண்கள் அனைவருக்கும் இப்படியான எண்ணம் தான் வரும் என்றே நினைக்கிறேன் ஸ்கூல் பையன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. good story but married girls exploit affection shown by husband in wrong ways nowadays

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம் அருள் ஐயா.
      நாம் கதைகளில் நல்லதையே சொல்வோமே...!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  12. அருமையான கதைதான் தோழி! இழப்பு என்று வரும்போது தாங்கிக்கொள்ளும் திறன் இருவருக்குமே வேண்டும்தான். இங்கே தானில்லாவிட்டாலும் அவர் தன் இழப்பைத்தாங்கி வாழ கற்றுக்கொடுக்கும் அன்பும் உன்னதமானது. நல்ல கற்பனை வாழ்த்துக்கள்!

    த ம. 5

    பதிலளிநீக்கு
  13. ப்ரியங்களின் பிரிவு தாங்கி கொள்ள முடியாதுதான்... ஆனால் எதிர்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். நல்ல கதை!

    த.ம-6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகான ஆழமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  15. அழகான கரு கொண்ட கதை... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அகல்.

      நீக்கு
  16. புனிதாவின் விளக்கம் அருமை... புரிந்து கொண்டார் தந்தையும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  17. தாயின் மறைவுக்குப் பிறகான தந்தையின் தவிப்பு, புனிதாவுக்குள் புதிய சிந்தனையை எழுப்பியிருக்கவேண்டும். அதன் வெளிப்பாடே இத்தற்காலிகப் பிரிவுச் சிந்தனை என்று தோன்றுகிறது. நேரடியாக சொல்லப்படாவிட்டாலும் வாசகர் அதை உணரும் வண்ணம் அழகாக சொல்லியிருக்கீறீர்கள். அருமையானதொரு கதைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன விளக்கம் தான் உண்மையானது.
      நான் சுறுக்கி எழுதினேன். நம் வாசக பதிவர்கள் அனைவரும்
      புரிந்து கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  18. உண்மை என்று ஒத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனேகமாக இது உண்மையாகத் தான் இருக்கும்
      என்று நானும் நினைக்கிறேன் ஸ்ரீராம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  19. மகள் சொன்னதை யோசித்தார். அவள் சொல்வதும் உண்மைதான். தான் இருக்கும் வரையில் இன்பத்தைக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியாவது போங்கள் என்று நினைத்திடாமல்... தான் இல்லாமல் போனாலும் அதைச் சகித்துக் கொண்டு வாழ கற்றுக் கொடுப்பதும் ஒரு வகையில் அன்புதான்... புரிந்ததும் மகளைத் தட்டிக்கொடுத்து விட்டு இரயில் ஏற்றி அனுப்பினார்

    ஆகா ! என்ன அருமையான கதையல்ல! வாழ்வியல் நூட்பம் பொதிந்த உண்மை! பாராட்ட சொல்லை தேடுகிறேன்! வாழ்வாங்கு வாழ்க அருணா!.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வாழ்த்தை
      வணங்கி ஏற்கிறேன் புலவர் ஐயா.

      நீக்கு
  20. தனிமை நம்மை மிகவும் யோசிக்க வைக்கவும்,உருவாக்கம் உதவுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமை கொடுமையே... என்றாலும் சிலநேரங்களில்
      உங்களின் கருத்து படி தான் நடக்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  21. சிறந்த வழிகாட்டலைக் கதை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிலிங்கம் ஐயா.

      நீக்கு